YouTurn

சீமான் நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்துப் பரப்பப்படும் போலி News Card!

சீமான் நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்துப் பரப்பப்படும் போலி News Card!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

புதிய தலைமுறை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்ட News Card-ஐ Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டதாகும்.

பரவிய செய்தி

Artificial Intelligence சம்மந்தமாவா?


image.png


Link / Archive Link 


கே டி ராகவன் கிட்ட அப்படி என்ன சந்தேகம்


image.png


Link / Archive Link 

விரிவான விளக்கம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஏப்ரல் 5ஆம் தேதியன்று சென்னை வந்தார். அப்போது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் வெளியானது. இவ்வாறான ஒரு சந்திப்பு நடந்ததாக சொல்லப்படுவதை சீமான் மறுத்தார். 


இந்நிலையில், ’நான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை. சில தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பதற்காக அதே ஹோட்டலில் தங்கியிருந்த கே.டி.ராகவனை தான் சந்தித்தேன்’ என்று சீமான் விளக்கமளித்ததாக குறிப்பிடும் ‘புதிய தலைமுறை’ செய்தி ஊடகத்தின் News Card சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?


பரப்பப்படும்  News Card-ல் 06/04/25 என்ற தேதியும் 2.00 PM என்ற நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு ‘புதிய தலைமுறை’ செய்தித் தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். 

image.png

‘புதிய தலைமுறை’யின் ‘எக்ஸ்’ தளத்தில் 06/04/25 என்ற தேதியும் 2.00 PM நேரமும் குறிப்பிடப்பட்ட பதிவை காணமுடிந்தது. அதில், “நிர்மலா சீதாராமனை நான் சந்திக்கல; சந்திச்சிருந்தா தைரியமா 'இதுக்காகத்தான் சந்திச்சேன்'னு சொல்லுவேன்" என்று கூறி நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக சொல்லப்படுவதை சீமான் மறுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில்  கே.டி.ராகவனை சந்தித்தது பற்றி ஏதும் குறிப்பிடப்படுவில்லை. 

மேலும், ‘புதிய தலைமுறை’யின் பேஸ்புக் தளத்தில் இதுகுறித்து  06/04/25 என்ற தேதியும் 12.00 PM நேரமும் குறிப்பிடப்பட்ட ஒரு பதிவைக் காணமுடிந்தது. அதிலும் கே.டி.ராகவனை சந்தித்தது பற்றி ஏதும் குறிப்பிடப்படுவில்லை. 

இதிலிருந்து பரப்பப்படும்  News Card புதிய தலைமுறை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்ட  News Card-ஐ Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது.


முடிவு:


’தான் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை. சில தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பதற்காக அதே ஹோட்டலில் தங்கியிருந்த கே.டி.ராகவனைதான் சந்தித்தேன்’ என்று சீமான் விளக்கமளித்ததாக பரப்பப்படும் News Card, Edit செய்து போலியாக உருவாக்கப்பட்டதாகும்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.