YouTurn

’அலைபேசியில் பேசிக்கொண்டே வேறொரு ஆணுடன் சென்ற பெண்’ என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

’அலைபேசியில் பேசிக்கொண்டே வேறொரு ஆணுடன் சென்ற பெண்’ என்று பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோவாகும்.

பரவிய செய்தி

இது ரீல்ஸ் இல்ல..
போனை பேசிக்கொண்டே
கட்டியவனை விட்டுட்டு கண்டவன் வண்டியில் ஏறிப் போய் இருக்கு


image.png


X Link


விரிவான விளக்கம்

பெட்ரோல் பங்கிற்கு தன் ஆண் துணைவருடன் வந்த பெண் ஒருவர், அலைபேசியில் பேசிக்கொண்டே வேறொரு ஆணின் வண்டியில் ஏறிச் செல்வது போன்ற வீடியோவை பதிவிட்டு, ’இது ரீல்ஸ் இல்ல.. உண்மை சம்பவம்’ என்று எக்ஸ் தளத்தில் பரப்பப்படுகிறது.

https://x.com/i/web/status/1857986612270878824

உண்மை என்ன:

பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’Sanjjanaa Galrani’ என்ற பேஸ்புக் பக்கத்தில் இதே வீடியோ பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அப்பதிவிலே, ”இப்பக்கத்தில் முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த குறும்படங்கள் பொழுதுபோக்கு மற்றும் விழிப்புணர்வு நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன” என்ற Disclaimer கொடுக்கப்பட்டுள்ளது. 

image.png

மேலும், ’Sanjjanaa Galrani’ பேஸ்புக் பக்கத்தில் தேடியதில், இது போன்ற பல scripted வீடியோக்கள் பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. அவ்வீடியோவின் இறுதியில், Disclaimer கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த Disclaimer-ஐ வெட்டி (Cut) நீக்கிவிட்டு பரப்புகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.


image.png

இதிலிருந்து பரப்பப்படும் வீடியோ, முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோ என்பது உறுதியாகிறது.

முடிவு: 

முன்னரே திட்டமிட்டு எடுக்கப்பட்ட scripted வீடியோவை உண்மை என நினைத்து தவறாக பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.