YouTurn

தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் குறித்து எதுவும் இல்லையா? பரவும் வதந்தி!

தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் குறித்து எதுவும் இல்லையா? பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இரண்டாம் வகுப்பு - முதல் மற்றும் மூன்றாம் பருவ தமிழ் பாடப்புத்தகங்களில், ஆத்திச்சூடி மற்றும் கொன்றைவேந்தன் குறித்த பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.

பரவிய செய்தி

"தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் ஆத்திச்சூடி மற்றும் கொன்றைவேந்தன் குறித்து எதுவுமே இல்லை" - 'Shree Tv' ஊடகப் பிரிவினர்



Facebook Link:

விரிவான விளக்கம்

தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் ஆத்திச்சூடி மற்றும் கொன்றைவேந்தன் குறித்து எதுவுமே இல்லை என்று கூறி “Shree TV” ஊடகப் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் வீடியோ ஒன்றை சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். 



உண்மை என்ன? 


பரவி வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிய, ஆத்திச்சூடி மற்றும் கொன்றைவேந்தன் குறித்து தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் ஆய்வு செய்தோம். 


இரண்டாம் வகுப்பு - முதல் பருவ தமிழ் பாடப்புத்தகத்தில், பக்கம் எண் 49-ல் ஆத்திச்சூடி குறித்து கதை வடிவில் விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. 



இதே போன்று, இரண்டாம் வகுப்பு - முதல் பருவ தமிழ் பாடப்புத்தகத்தில், பக்கம் எண் 37-ல் கொன்றைவேந்தன் குறித்து பத்து பாடல்களும், அதற்கான எளிய விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளதைத் தெளிவாகக் காண முடிகிறது. 


இந்நிலையில்  தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் ஆத்திச்சூடி மற்றும் கொன்றைவேந்தன் குறித்து எதுவுமே இல்லை என்று கூறி “Shree TV” சமூக ஊடகப் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் தவறான செய்தியை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில், தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் ஆத்திச்சூடி மற்றும் கொன்றைவேந்தன் குறித்து எதுவுமே இல்லை என்று பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க