யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பல்லடம் அங்காளம்மன் கோவில் ரசீது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
மொட்டை அடிக்க 1000 ரூபாய் வசூலிப்பு
விரிவான விளக்கம்
பல்லடம் அங்காளம்மன் கோவிலில் மொட்டை அடிக்க 1,000 ரூபாய் கட்டணம் வசூலிப்பு என்று கூறி, ரசீது ஒன்றின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை பாஜகவினர்பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
இத பார்த்தா நம்மளே ஒரு பிளேடு வாங்கி
— கருடன் (@Ravichandran15P) July 12, 2024
வீட்ல மொட்டை அடிச்சு
மயிரை பூரா கேரிபையில் கட்டி கொண்டு கோவில் கிட்ட கொட்ட வேண்டியது தான் போல.. https://t.co/hzH8XBZ8he
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இவை தவறான செய்தி என்பதை அறிய முடிந்தது.
பரவி வரும் ரசீதின் புகைப்படத்தில் “தினமலர்” என்று வாட்டர்மார்க் குறிப்பிடப்பட்டிருந்ததால், இது குறித்து தினமலர் ஊடகத்தின் சமூக ஊடகங்களில் ஆய்வு செய்து பார்த்தோம்.
மொட்டைக்கு ஆயிரம் ரூபாயா?#Temple | #Palladamhttps://t.co/y4W3uzOWeZ pic.twitter.com/dSchRukEkJ
— Dinamalar (@dinamalarweb) July 12, 2024
‘மொட்டைக்கு ஆயிரம் ரூபாயா?’ என்று குறிப்பிட்டு, நேற்று (ஜூலை 12) நியூஸ் கார்டு ஒன்றை பதிவிட்டிருந்தது. அதில், “மொட்டை அடிக்க 1,000 ரூபாய் வசூலிப்பு! பல்லடம் அங்காளம்மன் கோவிலில் மொட்டை அடிக்க 1,000 ரூபாய் கட்டணம் வசூலித்த ரசீது வெளியான நிலையில், அறநிலையத்துறை செயல் அலுவலர் ராமசாமி, ‘அது போலி ரசீது. போலீசில் புகார் அளிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்” என்றும் குரிப்பிடப்பட்டிருந்தது.
இதன் மூலம் தினமலர் வெளியிட்டிருந்த போலி செய்தி என்று குறிப்பிட்டு வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை, எடிட் செய்து சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்புவதை அறிய முடிந்தது.
மேலும் படிக்க: மொழி தெரியாமல் கஷ்டப்படுவதைத் தடுக்க ஹிந்தி போன்ற பல மொழிகளைக் கற்க வேண்டும் என நடராஜன் கூறியதாக தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!
மேலும் படிக்க: கள்ளச்சாராய சாவை முன்பே கணித்து பதவி விலகிய எஸ்.பி என தினமலர் வெளியிட்ட செய்தி உண்மையா?
இதற்கு இதே போன்று பரவிய பல போலி செய்திகள் குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: ’வாசுகி பாம்பு’ - புராண கதாப்பாத்திரத்தை உண்மையாக்க முயற்சி செய்யும் தினமலர்!
முடிவு:
நம் தேடலில், பல்லடம் அங்காளம்மன் கோவிலில் மொட்டை அடிக்க 1,000 ரூபாய் வசூலிப்பு என சமூக ஊடகங்களில் பரவும் செய்தி போலியானது என்பதை அறிய முடிகிறது.
