யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரப்பப்படும் ஆடியோ 2020ஆம் ஆண்டு ஜீலை மாதம் செய்தியாக வெளியிடப்பட்டது என்பதும் இது 5 ஆண்டுகள் பழமையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தி
கிண்டி EOW இன்ஸ்பெக்டருக்கே இந்த நிலமைனா?? பொதுமக்களை பற்றி கொஞ்சம் யோசிச்சி பாருங்க!

விரிவான விளக்கம்
காவலர் ஒருவர் மற்றொரு சீருடையணியாத காவலரிடம் காரணம் ஏதுமில்லாமல் கடுமையாக பேசியதாக இன்னொரு காவல் ஆய்வாளரிடம் புகார் சொல்லியிருக்கிறார். அந்த காவல் ஆய்வாளர் சம்பந்தப்பட்ட காவலரிடம் இவ்வாறு மற்றவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது தவறான விஷயம் என்று சொல்கிறார். அவர்கள் இவ்வாறு பேசிக்கொள்ளும் ஆடியோவை பதிவிட்டு, ”காவல் ஆய்வாளருக்கே இந்த நிலை என்றால் பொது மக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்” என்று பாஜக ஆதரவாளரான சரவணபிரசாத் சமூக வலைத்தளத்தில் பரப்பிவருகிறார்கள்.
கிண்டி EOW இன்ஸ்பெக்டருக்கே இந்த நிலமைனா?? பொதுமக்களை பற்றி கொஞ்சம் யோசிச்சி பாருங்க 😳😳😳😳😳 pic.twitter.com/5lkXQRVyaN
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த ஆடியோ வீடியோ format-ல் பதிவிடப்பட்டிருக்கிறது. அதன் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’THE ROOSTER NEWS’ என்ற யூடியூப் செய்தித்தளத்தில் இதனைக் காணமுடிந்தது.

அதில் இந்த ஆடியோ குறித்த செய்தி ”உயர் அதிகாரியிடம் பேசி மாட்டிக்கொண்ட காவலர்” என்ற தலைப்பில் 2020ஆம் ஆண்டு ஜீலை மாதம் வெளியிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அப்போது எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து, பரப்பப்படும் ஆடியோ பற்றிய இந்த செய்தி வீடியோ 5 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவருகிறது.
முடிவு:
5 ஆண்டுகள் பழமையான ஆடியோ பற்றிய செய்தியை தற்போது நடந்ததாக பாஜக ஆதரவாளரான சரவணபிரசாத் தவறாக பரப்பி வருகிறார்.