
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
திருவண்ணாமலையிலிருந்து எடுத்து செல்லப்பட்ட மஹாவிஷ்ணு சிலை இன்று சனிக்கிழமை கர்நாடகாவில் இனிதே பிரதிஷ்டை செய்யப்பட்டது.இனி உலகம் காெடிய பிணியிலிருந்து மீழ பாேகிறது. ஓம் நமாே நாராயணாய நமக.

Facebook link | archive link
விரிவான விளக்கம்
கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரில் உள்ள ஈஜிபுரா பகுதியில் அமைந்து இருக்கும் ஸ்ரீகோதண்டராம சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்காக ஒரே கல்லில் 64 அடி உயரம் கொண்ட ஸ்ரீவிஸ்வரூப கோதண்டராம சாமி சிலையை செய்ய முடிவெடுத்தனர். இதற்கான கல் தமிழகத்தின் திருவண்ணாமலை பகுதியில் இருப்பதை அறிந்து பாறையை வெட்டி எடுக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது.

கடந்த 2016-ம் ஆண்டு சாமி சிலை செய்யும் பணிகள் துவங்கப்பட்டன. பின்னர் 300 டன் சாமி சிலையை லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூருக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டன. 2018-ல் ஏற்பாடு செய்யப்பட்டாலும் 2019-ல் பெங்களூர் செல்ல பல இடையூறுகளை சந்தித்தது. எனினும், 2019-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி சாமி சிலை பெங்களூருக்கு சென்றடைந்ததாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

தற்போது அந்த சிலையானது கோவிலில் நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருவதாக ஓர் சிலையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுவ வருகிறது. ஆனால், அது தவறான புகைப்படமாகும். சிலை நிறுவப்பட்டது தொடர்பாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.


கடந்த 2016-ம் ஆண்டு சாமி சிலை செய்யும் பணிகள் துவங்கப்பட்டன. பின்னர் 300 டன் சாமி சிலையை லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூருக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டன. 2018-ல் ஏற்பாடு செய்யப்பட்டாலும் 2019-ல் பெங்களூர் செல்ல பல இடையூறுகளை சந்தித்தது. எனினும், 2019-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி சாமி சிலை பெங்களூருக்கு சென்றடைந்ததாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

தற்போது அந்த சிலையானது கோவிலில் நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருவதாக ஓர் சிலையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்படுவ வருகிறது. ஆனால், அது தவறான புகைப்படமாகும். சிலை நிறுவப்பட்டது தொடர்பாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.
