YouTurn

1917-ல் ஒரு ரூபாய் மதிப்பு 13 டாலருக்கு சமமாக இருந்ததா ?

1917-ல் ஒரு ரூபாய் மதிப்பு 13 டாலருக்கு சமமாக இருந்ததா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நீண்ட காலமாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 1917 ஆம் ஆண்டில் ரூபாயின் டாலருக்கு நிகரான மதிப்பு பற்றிய படங்கள், தகவல்கள் பரவி வருகிறது. இத்தகவல்கள் உண்மையா ? பொய்யா ? என்ற ஆதாரப்பூர்வமாக யாரும் நிரூபிக்கவில்லை. 1917 ஆம் ஆண்டில் " ஒரு ரூபாயின் மதிப்பு 13 அமெரிக்க டாலருக்கு " சமம். ஆனால்...

பரவிய செய்தி

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1917-ல் ஒரு ரூபாய் மதிப்பு 13 டாலருக்கு சமமாக இருந்தது. ஆனால், 2014-ல் ஒரு டாலரின் மதிப்பு 63 ரூபாய் அளவிற்கு உயர்ந்து உள்ளது. இந்தியாவின் மீது பற்று இருந்தால் இந்த தகவலை பகிரவும்.

விரிவான விளக்கம்

நீண்ட காலமாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 1917 ஆம் ஆண்டில் ரூபாயின் டாலருக்கு நிகரான மதிப்பு பற்றிய படங்கள், தகவல்கள் பரவி வருகிறது. இத்தகவல்கள் உண்மையா ? பொய்யா ? என்ற ஆதாரப்பூர்வமாக யாரும் நிரூபிக்கவில்லை.

1917 ஆம் ஆண்டில் " ஒரு ரூபாயின் மதிப்பு 13 அமெரிக்க டாலருக்கு " சமம். ஆனால், 2014 ஆம் ஆண்டில் ஒரு டாலரின் மதிப்பு 63 ரூபாய்க்கு அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது பரவும் தகவல். 2018-ல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 71-ஐ கடந்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இவை இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியை எடுத்துரைக்கிறது என்று கருதப்படுகிறது.



" 1873 ஆம் ஆண்டில் வெள்ளி நெருக்கடி உருவான சூழலில் பல நாடுகள் தங்கம் மதிப்பளவு முறையை ஏற்றுக் கொண்டனர். 1898-ல் இந்தியன் கரன்சி கமிட்டியின் பரிந்துரையின்படி பிரிட்டிஷ் இந்தியா தங்க பரிமாற்றம் மதிப்பு முறையை அதிகாரப்பூர்வமாக ஏற்று அதனை நிலைப்படுத்த பிரிட்டிஸ் பவுண்ட்ஸ்க்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒன்று நிர்ணயிக்கப்பட்டது ( எ.கா ஒரு பவுண்ட்= 15 ரூபாய் ) "ஆரம்பத்தில் “ பரிமாற்ற விலை “  என ஏதும் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை. பதிலாக, தங்கத்தை நிலையான பண மதிப்பிற்கு பயன்படுத்தப்பட்டது. அன்றைய காலத்தில் பிரிட்டிஷ் பவுண்ட் இல் இருந்து டாலருக்கு மாற்ற, பிரிட்டனில் தங்கம் வாங்கி அதனை அமெரிக்காவிற்கு எடுத்து சென்று அங்குள்ள டாலருக்கு விற்று விடுவர். 1915 ஆம் ஆண்டில் நிலையாக இருந்த பவுண்ட்ஸ் மற்றும் டாலர் மதிப்பு 1919-ல் 1 பவுண்ட்= $4.70 ஆக மாறியது.



இந்திய ரூபாயில் “ பரிமாற்ற விலை “ ஆனது 1947 ஆம் ஆண்டிற்கு பிறகே தொடங்கியது. 1917 ஆம் ஆண்டில் ஒரு ரூபாயின் மதிப்பு 13 டாலருக்கு நிகராக இருக்கவில்லை.

ஒரு பவுண்ட் = 15 ரூபாய்,

ஒரு பவுண்ட்= 4.70 டாலர். எனில், 15 ரூபாய் = 4.70 டாலருக்கு சமமாக இருந்துள்ளது. ஒரு டாலர் தோராயமாக 3 ரூபாய்க்கு நிகராக இருந்து உள்ளது. ஆக, இந்திய ரூபாய் மதிப்பு அதிகமாக இருக்கவில்லை.



" 1947 ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு பிறகு குறைந்தபட்சம் இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்காவின் டாலர் மதிப்பு சமநிலையிலேயே இருந்துள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு மேற்கொண்ட ஐந்தாண்டு திட்டங்கள், வளர்ச்சி பணிகள் என இந்திய ரூபாயின் மதிப்பை சரிய விடாமல் வைத்து இருந்தது. 1948-1966 வரையிலான காலக்கட்டத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4.79 ஆக இருந்து உள்ளது "

ஆனால், இந்திய அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் உடன் சந்தித்த இரு தொடர்ச்சியான போரால் பொருளாதார ரீதியாக பாதிப்பை கண்டது. இதையடுத்து, 1971 ஆம் ஆண்டில் பிரிட்டன் உடனான இந்திய ரூபாய் இணைப்பு துண்டிக்கப்பட்டு நேரடியாக அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்டது.

1917 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்க டாலருக்கான நேரடி மதிப்பு முறை இல்லை. பிரிட்டன் பவுண்ட் மதிப்பை வைத்து பார்க்கையில் ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருடன் குறைவாகவே இருந்து உள்ளது. ஆக, 1 ரூபாய் = 13 டாலர் என்பது முற்றிலும் தவறான தகவலே..!!

சுருக்கமாக

இந்திய ரூபாயில் “ பரிமாற்ற விலை “ ஆனது 1947 ஆம் ஆண்டிற்கு பிறகே தொடங்கியது. 1917 ஆம் ஆண்டில் ஒரு ரூபாயின் மதிப்பு 13 டாலருக்கு நிகராக இருக்கவில்லை.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.