YouTurn

13 இலக்க எண்கள் கொண்ட அழைப்பால் வெடித்து மரணமா ?| உண்மை என்ன ?

13 இலக்க எண்கள் கொண்ட அழைப்பால் வெடித்து மரணமா ?| உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஹாய் பிரண்ட்ஸ், இப்போ நம்ம தமிழ்நாட்டுல ஏதோ புதுசா ட்ரெண்ட் பண்ணுறங்கலாம். ஏதோ 13 நம்பரில் இருந்து, 6 நம்பரில் இருந்து கால் வந்தா அட்டன் பண்ண இரண்டாவது செகண்ட் செல்போன் வெடிக்குதாம். தூக்குதுக்குடியில 27 பேருக்கு பண்ணிருக்காங்கனு எனக்கு ஒரு ஃபார்வர்டு மெஜேஜ் வந்துச்சு. அதேபோல், சென்னையில இருந்து ஒரு நண்பர் பேசி அனுப்பி இருக்காரு, சிங்கப்பூரில் இருக்கிற என் பிரண்ட்ஸ் ஷேர் பண்ணாங்க. உங்களால் முடிஞ்ச வரைக்கும் ஷேர் பண்ணுங்க !!

விரிவான விளக்கம்

13 இலக்க மற்றும் 6 இலக்க எண்களை கொண்டு வரும் செல்போன் அழைப்புகளை அட்டன் செய்தால் அடுத்த சில நொடிகளில் செல்போன் வெடித்து விடுவதாக இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் ஒருவரின் புகைப்படத்தை வைத்து பேசப்பட்ட 30 நொடிகள் கொண்ட வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

புகைப்படத்தில் இறந்த நிலையில் இருப்பவரின் உடல் இரத்த வெள்ளத்தில் இருப்பதால் அந்த வீடியோவை பதிவிடவில்லை. வைரல் செய்யப்படும் புகைப்படம், வீடியோ மற்றும் தகவலின் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

இரத்த வெள்ளத்தில் இருக்கும் உடல் அருகே இருக்கும் கடையின் கண்ணாடியில் அதிமுக கொடியின் வண்ணத்தில் " அம்மா பொது இசேவை மையம் " என எழுதப்பட்டு இருந்தது.



ஆகையால், சமீபத்தில் அதிமுக பிரமுகரோ, அதிமுக அலுவலகத்தில் யாரும் இறந்தார்களா எனத் தேடுகையில், " ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் இசேவை நடத்தி வரும் அதிமுக பிரமுகரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அரிவாளால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது " என ஆகஸ்ட் 3-ம் தேதி updatenews360.எனும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.



வாசகர்கள் தரப்பில் உயிரிழந்தவரின் புகைப்படங்கள் நமக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அந்த புகைப்படங்களும், கொலை செய்யப்பட்டவரின் புகைப்படங்களும் ஒன்றாக இருக்கின்றன. கொலை நிகழ்ந்த இசேவை மையமும் மேற்காணும் செய்தியில் இடம்பெற்று இருக்கிறது.

ஆகஸ்ட் 3-ம் தேதி " ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் அரிவாளால் வெட்டி படுகொலை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு " எனும் தலைப்பில் தினத்தந்தியும் கொலை சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மேலும் படிக்க : 13 இலக்க எண் அழைப்புகளால் செல்போன்கள் வெடிக்குமா ?

13 இலக்க எண்கள் கொண்ட செல்போன் அழைப்புகள் வருவதாகவும், செல்போன்கள் வெடிப்பதாகவும் பரப்பப்படும் தகவல்கள் வதந்தியே. இந்த வதந்தி கடந்த பல ஆண்டுகளாகவே பரப்பப்பட்டு வருகிறது. 2018-ல் தவறான புகைப்படங்கள் உடன் இதே வதந்தி தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்டவையில் வைரல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முடிவு :
நம் தேடலில், 13 இலக்க மற்றும் 6 இலக்க எண்களை கொண்டு வரும் செல்போன் அழைப்புகளை அட்டன் செய்தால் செல்போன்கள் வெடிப்பதாக வைரல் செய்யப்படும் வாட்ஸ்அப் வீடியோ வதந்தியே.


வீடியோவில் காண்பிக்கப்பட்ட இறந்த நிலையில் இருப்பவர் செல்போன் வெடித்து இறக்கவில்லை, அவர் ஈரோடு அருகே படுகொலை செய்யப்பட்டவர் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க