
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தீபாவளி பண்டிகையின் போது 5 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றுவதற்காக 133 கோடி ரூபாயை ஒதுக்கியதாக முகநூலில் தமிழில் பதிவுகளை காண நேரிட்டது. தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் இந்த தகவல் பரவி இருந்தது என்பதை அறிய முடிந்தது. Facebook link | archived link...
பரவிய செய்தி

விரிவான விளக்கம்

Facebook link | archived link

தமிழில் மட்டுமல்லாமல் பிற மாநிலத்திலும் , சாக்சி ஜோஷி போன்ற பத்திரிக்கையாளர்கள், சில செய்தி இணையதளங்கள் கூட உத்தரப் பிரதேச அரசு அகல் விளக்குகளை ஏற்றும் நிகழ்ச்சிக்கு 133 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக பதிவிட்டு இருந்தனர்.
Exactly what I meant while wishing Diwali worth 133 crore to UPites.
See a picture speaking thousand words... https://t.co/2kvxX6cvwv
— Sakshi Joshi (@sakshijoshii) October 29, 2019
Twitter post archived link
உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியா நகரில் உள்ள சரயு நதியோரத்தில் தீபாவளி பண்டிகையின் போது லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றி கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெறுவதுண்டு. கடந்த ஆண்டில் 4 லட்சத்து 10 ஆயிரம் அகல் விளக்குகளை ஏற்றி சாதனை படைத்து இருந்தனர்.
2019 அக்டோபர் 26-ம் தேதி கிட்டத்தட்ட 5.51 லட்சம் அகல் விளக்குகளை சரயு ஆற்றங்கரையில் ஏற்றி சாதனை படைத்து உள்ளனர். இதற்காக உத்தரப் பிரதேச அரசு 133 கோடியை செலவிட்டு இருப்பதாக தவறான செய்திகள் பரவி வருவதாக NDTV -ஐ சேர்ந்த Alok pandey தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
An update on a massively viral 'story' , that claims the @UPGovt spent 133 crore rupees on lighting diyas at Ayodhya . That amount is 1.32 crore rupees ! Looks like someone forgot to mention the (dot) in their story ! I read it first in a very reputed newspaper ! pic.twitter.com/k7npnJvPKt
— Alok Pandey (@alok_pandey) October 30, 2019
Twitter post archived link
உத்தரப் பிரதேச மாநில அரசு லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றி கொண்டாடும் நிகழ்ச்சிக்காக செலவிட்ட தொகை 1.32 கோடியாகும். அதனை 133 கோடி எனத் தவறாக பரப்பி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் 132.70 லட்சம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதனை 133 கோடி என தவறாக புரிந்து கொண்டு செய்திகளை பரப்பி உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக உத்தரப் பிரதேச அரசு அகல் விளக்குகளை ஏற்றி தீபாவளி நிகழ்ச்சிகளை கொண்டாடி வருகிறது.