YouTurn

ஹிட்லர் மற்றும் ஒசாமா பின்லேடனுக்கு நோபல் பரிசா ?

ஹிட்லர் மற்றும் ஒசாமா பின்லேடனுக்கு நோபல் பரிசா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

அடோல்ப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபர் ஆவார் . ஸ்வீடிஷ் பார்லிமென்ட்டின் காரியஸ்தர் மற்றும் சமூக ஜனநாயகவாதி ஆன erik brandt அவர்கள் ஹிட்லரின் பெயரை பரிந்துரை செய்தார் .அவர் கூறிய காரணம் என்னவென்றால் ஹிட்லர் அந்நாட்டின் பலகோடி மக்களின் நம்பிக்கையும் ,அன்பையும் பெற்றவர் . மேலும் செப்டம்பர் மாதம் 1938...

பரவிய செய்தி

ஹிட்லர் மற்றும் ஒசாமா பின்லேடன் இவர்களின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கபட்டது என்று கூறப்படுகிறது.

விரிவான விளக்கம்

அடோல்ப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபர் ஆவார் . ஸ்வீடிஷ் பார்லிமென்ட்டின் காரியஸ்தர் மற்றும் சமூக ஜனநாயகவாதி ஆன erik brandt அவர்கள் ஹிட்லரின் பெயரை பரிந்துரை செய்தார் .அவர் கூறிய காரணம் என்னவென்றால் ஹிட்லர் அந்நாட்டின் பலகோடி மக்களின் நம்பிக்கையும் ,அன்பையும் பெற்றவர் .


மேலும் செப்டம்பர் மாதம் 1938 ஆம் ஆண்டு நடக்க இருந்த ஐரோப்பிய போரை நிறுத்தி மக்களை காப்பாற்றி ஒப்பில்லாத தலைவராக இருந்தவர் என்று கூறியிருந்தார். இவ்வாறு மக்களை போரில் இருந்த காப்பாற்றிய தலைவரை கௌரவிக்க அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். எனினும், ஹிட்லரின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டது.


ஹிட்லரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது உண்மை என்றாலும், ஒசாமாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது என்றுக் கூறுவது பொய்யாகும். நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் ஒசாமா பின்லேடன் பெயர் இதுவரை இடம்பெறவில்லை.

ஏன் என்று கேட்டால் அவரை தீவிரவாதி என்று அனைவரும் கூறுவர். நாம் ஒரு மாற்று கருத்தை கூறினால் நம்மை வேறு கோணத்தில் பார்பர் . அதனால் நாங்கள் இதுவரை கூறிய உண்மையே போதுமானது . நீ மேற்கொண்ட புரட்சியில் வெற்றி பெற்றால் போராளியாகவும் , வீழ்ச்சியுற்றால் தீவிரவாதியாகவும் பார்க்கப்படுவாய் .

சுருக்கமாக

1939 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக அடோல்ப் ஹிட்லரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க