YouTurn

மீராகுமார் ராஜீவ்காந்தி வீட்டில் பணிபுரிந்தவரா ?

மீராகுமார் ராஜீவ்காந்தி வீட்டில் பணிபுரிந்தவரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஜூலை 2017 ல் நடந்த இந்தியா குடியரசுத்தலைவர் பதவிக்காக தேர்தல் நடைபெற்றது . இதில் ஆளும் பிஜேபி கட்சி சார்பில் ராம்நாத் கோவிந்த் போட்டியிட்டார் , எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர் மீரா குமார் . இருவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் , அரசியல்வாதிகள் , நன்கு படித்த...

பரவிய செய்தி

குடியரசுத்தலைவர் வேட்பாளரான மீரா குமார் ராஜீவ்காந்தி வீட்டில் வேலை செய்தவர் என்பது உங்களுக்கு எத்தனை பெயருக்கு தெரியும் .

விரிவான விளக்கம்

ஜூலை 2017 ல் நடந்த இந்தியா குடியரசுத்தலைவர் பதவிக்காக தேர்தல் நடைபெற்றது . இதில் ஆளும் பிஜேபி கட்சி சார்பில் ராம்நாத் கோவிந்த் போட்டியிட்டார் , எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்டவர் மீரா குமார் . இருவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் , அரசியல்வாதிகள் , நன்கு படித்த வழக்கறிஞர்கள் என இவர்களுக்குள் பல ஒற்றுமைகள் காணப்பட்டன .


 பீகாரில் ஆராஹ் மாவட்டத்தில் பிறந்தவர் மீரா குமார் . இவரது தந்தை ஜக்ஜீவன் ராம் அவர்கள் பிரதான தலித் தலைவர் , இவர் இந்தியாவின் துணை பிரதம மந்திரியாக பணியாற்றியவர் . இவரின் தாய் இந்த்ராணி தேவி சுதந்திர போராட்ட போராளி ஆவார் .


மீரா குமார் சட்டப் படிப்பு மற்றும் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் . அவர் 1973 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுசேவையில் இணைந்தார் , அதன்பின் ஸ்பெயின் , மொரீஷியஸ் , ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளின் தூதரகங்களில் பணிபுரிந்தவர் .


1985 ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்த மீரா குமார் , உத்திரப்பிரதேசம் பிஜினுரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் . அன்றைய காலகட்டத்தில் ராம்விலாஸ் பாஸ்வான் , மாயாவதி போன்ற மிகப்பெரிய தலித் தலைவர்களை தோற்கடித்தார் . 2009 இல் மன்மோகன் சிங்க் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் நீர்வள துறை அமைச்சராக பதவி ஏற்றார் . அதன் பின் லோக் சபாவின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .


இதனால் இந்திய நாட்டின் முதல் பெண் சபாநாயகர் ஆனார் மீரா குமார் . இவ்வருடம் நடந்த குடியரசுத்தலைவர் தலைவர் தேர்தலில் 35 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தாலும் , எதிர் அணியில் இதுவரை யாரும் இவ்வளவு வாக்குகள் பெற்றது இல்லை . அத்தகைய சாதனை படைத்தவர் . அவரை ராஜீவ்காந்தி வீட்டில் பணிபுரிந்தவர் என்று தவறாக செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர் . இது அவரை இழிவுப்படுத்த சிலர் செய்யும் காரியங்கள் .

சுருக்கமாக

வக்கீலுக்கு படித்தவரை ராஜீவ்காந்தி வீட்டில் பணிபுரிந்தவர் என்று கூறுவது நியாயமா !!!

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க