YouTurn

மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு இந்திய அரசாங்கம் அனுமதி.

மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு இந்திய அரசாங்கம் அனுமதி.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய சமையல் பொருள்களில் மிகவும் இன்றியமையாத பொருள் கடுகு . நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ளது என்று அனைவரும் அறிந்ததே . அப்படிப்பட்ட கடுகை மரபணு மாற்றம் செய்து வணிகத்தில் விற்பனை செய்ய எண்ணியுள்ளது இந்திய அரசாங்கம் . ஜெனரல் இன்ஜினியரிங் அட்வைசனல் கமிட்டி GM கடுகிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது ...

பரவிய செய்தி

மரபணு மாற்றப்பட்ட கடுகை பயிரிட இந்திய அரசாங்கம் அனுமதி வழங்க உள்ளது .

விரிவான விளக்கம்

 இந்திய சமையல் பொருள்களில் மிகவும் இன்றியமையாத பொருள் கடுகு . நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ளது என்று அனைவரும் அறிந்ததே . அப்படிப்பட்ட கடுகை மரபணு மாற்றம் செய்து வணிகத்தில் விற்பனை செய்ய எண்ணியுள்ளது இந்திய அரசாங்கம் .


ஜெனரல் இன்ஜினியரிங் அட்வைசனல் கமிட்டி GM கடுகிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது . சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கினால் வணிக பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வந்து விடும் . இந்தியாவில் வணிகரீதியாக தொடங்கப்படும் முதல் மரபணு மாற்றம் செய்த உணவு பயிர் இது தான் .


மரபணு மாற்றம் செய்த பயிர்களை உற்பத்தி செய்வதற்கு முக்கிய காரணமே அதிக மகசூல் , பூச்சி எதிர்ப்பு , வேகமாக வளரக்கூடிய பண்பு . இவற்றிக்காகவே மரபணு மாற்றம் செய்த பயிர்களை உற்பத்தி செய்ய விரும்பிகின்றன .


ஆனால் கடுகை பொறுத்தவரை இது தேவை இல்லை என்று தான் கூற வேண்டும் . கடுகின் பயன்பாடு சிறிதுதான் என்றாலும் , தேவைக்கு ஏற்ப உற்பத்தி நம் நாட்டில் உள்ளது .


சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கடுகு சாகுபடி செய்யும் நிலப்பரப்பு 12 கோடி ஹெக்டேர்களாகவும் விளைச்சல் 5 கோடி டன்களாகவும்  இருந்தது . ஆனால் 2015-2016 ஆண்டில் சாகுபடி பரப்பு 14 கோடி ஹெக்டேர்களாகவும் மட்டுமே அதிகரித்து 25.22 கோடி டன்களாக பெருகி உள்ளது .


கடுகு விளைச்சல் நன்றாக இருக்கையில் மரபணு மாற்றம் செய்த GM கடுகை கொண்டு வருவது விவசாயத்தை அளிக்கும் செயலாகும் . மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு எவ்வாறு எதிர்ப்புகள் பெருகி அதற்கு அனுமதி வழங்காமல் செய்தார்களோ அதே போல் கடுகிற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் .


ஏற்கனவே இந்தியாவில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுவருகின்றனர் . இந்த நிலையில் மரபணு மாற்றம் செய்த பயிர்களை கொண்டு வந்து மண்ணை மலடாக்க பார்கின்றார்கள் .

சுருக்கமாக

வெளிநாட்டில் இயற்கை பயிர்களை விவசாயம் செய்ய முயற்சி செய்கின்றார்கள் , நம் நாட்டில் செயற்கைக்கு மாற ஆசைப்படுகின்றார்கள் ..
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க