YouTurn

மசூர் பருப்பை உண்டால் பக்க விளைவுகள் ஏற்படுமா ?

மசூர் பருப்பை உண்டால் பக்க விளைவுகள் ஏற்படுமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழகத்தின் பள்ளிகளில் ஆரம்பத்தில் மதிய உணவு திட்டத்திற்கு மற்றும் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்க பயன்படுத்தப்பட்டது தான் இந்த மசூர் பருப்பு. இந்த பருப்பை சாப்பிட்டதால் குழந்தைகளுக்கு நரம்புக்கோளாறுகள் மற்றும் கை, கால் செயலிழப்பு போன்ற முடக்கு வாதம் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து...

பரவிய செய்தி

மசூர் பருப்பை சாப்பிட்டதால் நரம்புக்கோளாறுகள் மற்றும் முடக்கு வாதம் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்ட காரணத்தினால் தடை செய்யப்பட்டது. ஆனால், தற்போது மசூர் பருப்பின் மீதான தடையை நீக்கி விற்பனை செய்ய உள்ளனர்.

விரிவான விளக்கம்

தமிழகத்தின் பள்ளிகளில் ஆரம்பத்தில் மதிய உணவு திட்டத்திற்கு மற்றும் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்க பயன்படுத்தப்பட்டது தான் இந்த மசூர் பருப்பு. இந்த பருப்பை சாப்பிட்டதால் குழந்தைகளுக்கு நரம்புக்கோளாறுகள் மற்றும் கை, கால் செயலிழப்பு போன்ற முடக்கு வாதம் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 2007 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மசூர் பருப்பு தடை செய்யப்பட்டு தமிழக நுகர்வுப்பொருள் வாணிபக் கழகத்தால் அரசாணையும் வெளியிடப்பட்டது.



   ஆனால், தற்போது மசூர் பருப்பின் மீதான தடையை தமிழக அரசு நீக்க உள்ளது. மசூர் பருப்பை குறைந்த விலையில் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க எண்ணியுள்ளனர். மசூர் பருப்பின் மீதான தடையை நீக்குவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழக நுகர்வுப்பொருள் வாணிபக் கழகத்தின் இயக்குனர் கூறுகையில், மசூர் பருப்பானது தீங்கு இல்லாத உடலுக்கு நன்மை தரும் உணவுப்பொருள் ஆகும். ஆனால், அதில் சேர்க்கப்படும் கேசரி பருப்பால் தான் நரம்புக்கோளாறுகள் மற்றும் முடக்கு வாதம் ஏற்படுகிறது.


மசூர் பருப்பின் அடர் சிவப்பு நிறத்திற்காக அதில் சேர்க்கப்படும் கேசரி பருப்பின் விளைவால் தான் குழந்தைகளுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே கலப்படமில்லாத மசூர் பருப்பானது உடலுக்கு தீங்கு இல்லை என்பதால் மக்களுக்கு வழங்க இருப்பதாக கூறியுள்ளார்.


மசூர் பருப்பில் அதிகளவில் புரோட்டின் மற்றும் பி காம்ப்ளெக்ஸ் சத்துகள் உள்ளன. எனினும், அதன் நிறத்திற்காக அதனுடன் சேர்க்கப்படும் நிறமிகள் ஆபத்தானவை. குறைந்த விலையில் கிடைக்கும் கேசரி பருப்புகள் உடலுக்கு தீங்கானவை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவால் அறிவிக்கப்பட்டதை அடுத்து, 1961 ஆம் ஆண்டு கேசரி பருப்பு தடை செய்யப்பட்டது. எனினும், பல பகுதிகளில் கேசரி பருப்பானது மசூர் பருப்புடன் கலப்பு பயிராகப் பயிரிடப்பட்டது.


இந்தியாவில் பல்வேறு காலக்கட்டத்தில் பல பருப்புகள் தடை செய்யப்பட்டு, பின்னர் தடை நீக்கப்பட்டுள்ளன. அதைபோல், மசூர் பருப்பும் தடை நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் தரம் சோதித்த பின்னர் மசூர் பருப்பு போன்றவற்றை பயன்படுத்துவது சிறந்தது.

சுருக்கமாக

மசூர் பருப்புடன் கேசரி பருப்பை கலப்படம் செய்வதால் நரம்புக்கோளாறுகள் மற்றும் முடக்கு வாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கலப்படமற்ற மசூர் பருப்பை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு இல்லை என்று உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க