YouTurn

மகிழ்ச்சியை அளிக்க நடைபயணம் செய்யும் நாடோடி சிங்கம்.

மகிழ்ச்சியை அளிக்க நடைபயணம் செய்யும் நாடோடி சிங்கம்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

உண்மையில் நல்ல உள்ளம் கொண்டவர் டேவிட் அத்தோவே . UK வை சேர்ந்த NGO ஒருவர் இந்தியாவின் விவசாயிகள் குடும்பங்களுக்கு உதவ வந்துள்ளது பாராட்டப்பட வேண்டிய செயல் . டேவிட் அத்தோவே walk of joy india என்ற நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் . இவர் நாடோடி சிங்கம் என்று அழைக்கப்படுகிறார் . இவரின் நோக்கம் நடைபயணம்...

பரவிய செய்தி

UK வை சேர்ந்த NGO அமைப்பின் நிறுவனர் டேவிட் அத்தோவே நாடோடி சிங்கம் என்று அழைக்கப்படுகிறார் . இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு நிதி திரட்ட கன்னியாகுமரி முதல் அம்ரித்சர் வரை நடை பயணம் மேற்கொண்டு உள்ளார் .

விரிவான விளக்கம்

 உண்மையில் நல்ல உள்ளம் கொண்டவர் டேவிட் அத்தோவே . UK வை சேர்ந்த NGO ஒருவர் இந்தியாவின் விவசாயிகள் குடும்பங்களுக்கு உதவ வந்துள்ளது பாராட்டப்பட வேண்டிய செயல் . டேவிட் அத்தோவே  walk of joy india என்ற நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் .


இவர் நாடோடி சிங்கம் என்று அழைக்கப்படுகிறார் . இவரின் நோக்கம் நடைபயணம் மூலம் நிதி திரட்டி வணிக நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட இந்திய விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவுவது ஆகும் .


இந்த பயணம் ஜூலை 15 2017 தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியில் தொடங்கி 13 மாநிலங்களில் 6000 km தொலைவை கடந்து மே 2018 இல் பஞ்சாபில் உள்ள அம்ரித்சரில் முடிவடைகிறது . நடைபயணத்தில் விவசாயிகள் , அரசு சாரா நிறுவனங்களுக்கு நிலையான விவசாயம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி பிரச்சாரம் செய்யவும் , வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்புகொள்ளுமாறு  பேச உள்ளார் .


நடைபயணத்தின் நோக்கம் இந்தியாவில் மக்களுக்கு மகிழ்ச்சியையும் , நல்ல கருத்துகளை கூறுவது ஆகும் . இதனால் திரட்டப்படும் நிதியானது ஆதரவற்ற விவசாயிகளின் குடும்ப பெண்களுக்கு மாத உதவி தொகையாகவும் , குழந்தைகளுக்கு கல்வி உதவிக்காகவும் வழங்கப்படும் . இந்த அமைப்புடன் சில தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து உதவி செய்ய உள்ளன .


இவர்களின் லட்சியம் பிரச்சாரம் மூலம் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுவது ஆகும். உதவ முன் வருபவர்கள் www.walkofjoy.in என்ற இணைய முகவரியை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் .


உலகத்தில் மனிதநேயம் சிறிதாவது உள்ளது என்பதற்கு இவர்களே சான்று . நாட்டு மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமைகளை இவர்கள் போன்றவர்கள் செய்ய முன்வந்துள்ளனர் .

சுருக்கமாக

நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இவ்வுலகில் சிறிதாவது இருக்கத்தான் செய்கிறார்கள் ..

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க