
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பல வருடங்களாகவே பூமி அழியப்போகிறது என்ற செய்திகள் வந்துக் கொண்டே இருக்கின்றன . ஆனால் அது போன்ற எந்த ஒரு நிகழ்வுகளும் இதுவரை நடக்கவில்லை . எனினும் மக்கள் மனதில் பூமியின் அழிவைப் பற்றிய பயம் மட்டும் இருக்கத்தான் செய்கிறது . தற்போது இது போன்ற பயம் மேலைநாட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றது . பிளானட்...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பல வருடங்களாகவே பூமி அழியப்போகிறது என்ற செய்திகள் வந்துக் கொண்டே இருக்கின்றன . ஆனால் அது போன்ற எந்த ஒரு நிகழ்வுகளும் இதுவரை நடக்கவில்லை . எனினும் மக்கள் மனதில் பூமியின் அழிவைப் பற்றிய பயம் மட்டும் இருக்கத்தான் செய்கிறது . தற்போது இது போன்ற பயம் மேலைநாட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றது . பிளானட் எக்ஸ் அல்லது நிபிரு என்படும் கிரகம் 1995 ல் கண்டுபிடிக்கப்பட்டத்தில் இருந்து பூமியை அச்சுறுத்தி வருகிறது . நிபிரு கிரகம் வரும் அக்டோபர் மாதம் பூமியுடன் மோதி அழிவை ஏற்படுத்தும் என்று கூறி வருகின்றனர் .
புளுட்டோ கிரகத்தைத் தாண்டி நீள்வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகின்ற மர்ம அமைப்பை கோளா அல்லது விண் கல்லா என்று கூறாமல் நிபிரு என்று கூறியுள்ளனர் . பிளானட் எக்ஸ்-2017 வருகை என்ற நூலின் ஆசிரியர் டேவிட் மேடே கூறுகையில் , தென்துருவத்தில் இருந்து சூரியனின் சுற்றுப்பாதையில் நிபிரு வருகிறது . இதன் வருகை பற்றி பிளானட் எக்ஸ் என்ற YOUTUBE சேனல் ஒரு வீடியோவை வெளியிட்டனர் என்று கூறினார் . பூமியில் பல மாற்றங்கள் வந்தாலும் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றுக் கூறியுள்ளார் .
இதை பற்றி நாசா கூறியது , நிபிரு மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி வருபவை அனைத்தும் இணைய கதைகளே ஆகும் . இந்த கிரகம் 2015 , 2012 , 2003 ஆண்டுகளில் பூமியை தாக்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது . இது போன்ற செய்திகள் மக்களிடையே பயத்தை ஏற்படுத்துகிறது . ஆனால் பூமியை இரு பெரும் விண்கற்கள் நெருங்கின்றன என்பதை மட்டும் அறிவித்துள்ளனர் .
சில சதியாலோசனை கோட்பாடு கொண்டவர்கள் பூமியின் அழிவை பற்றி கூறுவர் . அதையெல்லாம் நம்பி இம்மாதிரியான செய்திகளை எவரும் பரப்ப வேண்டாம் . இதுபோன்ற பல செய்திகள் வந்து பொய்யாகி போகின்றன . எனவே மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை .