YouTurn

பிரகாஷ்ராஜ் விருதுகளைத் திருப்பி அளிப்பதாகக் கூறினாரா ?

பிரகாஷ்ராஜ் விருதுகளைத் திருப்பி அளிப்பதாகக் கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பத்திரிக்கையாளரின் கொலையைக் கொண்டாடுவதைப் பற்றி கண்டனம் தெரிவிக்காத பிரதமர் மோடி அவர்கள் என்னை விடச் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். மேலும் தனக்கு வழங்கிய தேசிய விருதுகளை அரசிடம் திருப்பி வழங்கத் தயங்க மாட்டேன் என்றுக் கூறியதாக செய்திகள் ஊடங்களிலும், வலைதளங்களிலும் வலம் வருகின்றன...

பரவிய செய்தி

பிரதமர் மோடி அவர்கள் தன்னை விடச் சிறந்த நடிகர் என்றும் அவர்கள் எனக்கு வழங்கிய விருதுகளை திருப்பி அளிக்கப் போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

விரிவான விளக்கம்

பத்திரிக்கையாளரின் கொலையைக் கொண்டாடுவதைப் பற்றி கண்டனம் தெரிவிக்காத பிரதமர் மோடி அவர்கள் என்னை விடச் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். மேலும் தனக்கு வழங்கிய தேசிய விருதுகளை அரசிடம் திருப்பி வழங்கத் தயங்க மாட்டேன் என்றுக் கூறியதாக செய்திகள் ஊடங்களிலும், வலைதளங்களிலும் வலம் வருகின்றன.


செப்டம்பர் 5-ம் தேதி பெங்களூரில் மூத்தப் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ்வர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அவரது படுகொலைக்கு கண்டனங்கள் எழுந்தன. பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ்வரின் படுகொலைக்கு அவரின் குடும்ப நண்பரும், நடிகருமான பிரகாஷ்ராஜ் கண்டனங்கள் தெரிவித்திருந்தார்.


இருப்பினும், கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ்ராஜ், கௌரி லங்கேஷ்வரின் படுகொலையை சிலர் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் மோடியின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள். அவர்களின் செயல்பாடுகள் பற்றி கன்னடங்கள் கூறாமல் மௌனமாக இருக்கிறார். இது போன்ற படுகொலைக்கு மோடி அவர்கள் மௌனமாக இருப்பதன் மூலம், என்னை விடச் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துள்ளார். நான் ஐந்து முறை தேசிய விருது வாங்கியுள்ளேன். எனினும், என்னை விட மிகச்சிறந்த நடிகரான அவருக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வாறு கூறியதற்காக பிரகாஷ்ராஜ் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.


ஆனால், பிரகாஷ்ராஜ் அவர்கள் தான் பெற்ற தேசிய விருதுகளை திருப்பி அளிக்கப் போவதாக கூறியதாகப் பல ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகின. இதை தெளிவுபடுத்தும் விதத்தில் பிரகாஷ்ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேசிய விருது எனது உழைப்பிற்கு கிடைத்தது. அதை திருப்பி அளிக்க நான் முட்டாள் இல்லை என்றுக் கூறியுள்ளார்.


பிரதமர் மோடி அவர்களுக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என்றுக் கூறியதை, தனது விருதுகளைத் திருப்பி அளிப்பதாகக் கூறினார் என்று தவறான செய்திகளை பரப்பியுள்ளனர்.

சுருக்கமாக

பிரகாஷ்ராஜ் அவர்கள் அளித்த பேட்டியில், மோடி அவர்கள் என்னை விடச் சிறந்த நடிகர். எனவே அவருக்கு சிறந்த நடிகருக்கான விருதை அளிக்க வேண்டும் ஆசைப்படுகிறேன் என்று கூறினார். மேலும், தேசிய விருதுகளை திருப்பி அளிக்கும் அளவிற்கு தான் முட்டாள் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க