YouTurn

பாலைவனமாக இருந்த பகுதியா இப்படி மாறியுள்ளதா ?

பாலைவனமாக இருந்த பகுதியா இப்படி மாறியுள்ளதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

காடுகளுக்கு இடையே அமைந்துள்ள சாலைகள் என்று அழகிய தோற்றத்தை கொண்டுள்ள இந்த படமானது வலைதளங்களில் மிகவும் பிரபலமானது . இந்த படத்தில் உள்ள சாலைகள் தங்களது ஊரை சேர்ந்தது என்ற கூறி பலர் இப்படத்தை பல கதைகளுடன் பதிவிடுகின்றன . எனினும் , வடநாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக ஒர் புதிய கதையை...

பரவிய செய்தி

பாலைவனமாக இருந்த ராஜஸ்தான் மற்றும் குஜராத்திற்கு இடைப்பட்ட தேசிய சாலைகள் இப்பொழுது அழகிய காடுகளாக மாறியுள்ளது .

விரிவான விளக்கம்

காடுகளுக்கு இடையே அமைந்துள்ள சாலைகள் என்று அழகிய தோற்றத்தை கொண்டுள்ள இந்த படமானது வலைதளங்களில் மிகவும் பிரபலமானது . இந்த படத்தில் உள்ள சாலைகள் தங்களது ஊரை சேர்ந்தது  என்ற கூறி பலர் இப்படத்தை பல கதைகளுடன் பதிவிடுகின்றன . எனினும்  , வடநாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக ஒர் புதிய கதையை இப்படத்தை தொடர்புப்படுத்தி உருவாக்கியுள்ளனர் .


2014 ஆண்டில் பதவியேற்ற பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ராஜஸ்தானில் இருந்து குஜராத்திற்கு காரில் பயணம் செய்த போது இந்த பாலைவன சாலைகளின் வழியாக சென்றுள்ளார் . இந்தபகுதியை பார்த்து வேதனை அடைந்த மோடி அவர்களுக்கு ஓர் சிந்தனை தோன்றியது . சாலைகளில் இருபுறமும் மேடுபள்ளங்களாக இருப்பதால் தண்ணீரை தக்கவைத்து கொள்ளும் , எனவே எளிதாக பசுமையாக்கி விடலாம் என்று நினைத்துள்ளார் . அதன்பின் அதிகாரிகளை அழைத்து இரண்டு ஆண்டுகளுக்குள் இப்பகுதி பசுமையாக வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார் .


இதை தொடர்ந்து பல லட்ச மரங்கள் நடப்பட்டு , போர்கால நடவடிக்கை மூலம் இப்பகுதிக்கு தண்ணீரை கொண்டு வந்து காடுகளை வளர்க்கும் பணியை தொடங்கினர் . பிரதமர் வெளிநாடுகளில் இருந்தாலும் இந்த காடுகள் வளர்க்கும் முயற்சி எந்த நிலையில் உள்ளது என்று விசாரிப்பார் . மூன்று ஆண்டுகளுக்கு பின் இப்படி ஒரு அழகிய காடுகளை உருவாக்கி உள்ளார் . இதற்காக யுனெஸ்கோசான்றிதழ் வழங்கியுள்ளது . இவ்வாறு ஒரு கதையை பல இடங்களில் சிலர் கூறி வருகின்றனர் . இன்னும் பலர் இந்த படமானது எங்கள் ஊரில் உள்ள சாலையில் எடுக்கப்பட்டது என்று பல பதிவுகளை பதிவிட்டுள்ளனர் .


ஆனால் இந்த காட்டில் உள்ள சாலையானது இந்தியாவிலேயே இல்லை . தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கங்காரோ என்ற தீவில் அமைந்துள்ளது . ஆஸ்திரேலியாவில் சுற்றுள்ள செல்பவர்கள் நீண்ட தூர பயணங்களுக்கு கங்காரோ தீவில் அமைந்துள்ள சாலைகளை தேர்ந்தெடுப்பர் . சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இந்த படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் . இவ்வாறு இருக்கையில் பலர் தங்களது ஊரில் உள்ள சாலை என்று தவறான கதைகளை கூறுவது கேளிக்கையாக உள்ளது .

சுருக்கமாக

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கங்காரோ என்ற தீவில் அமைந்துள்ள சாலையை இந்தியாவில் உள்ளது என்று கூறியுள்ளனர் ..

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க