YouTurn

பசுமை நாடுகள் பட்டியலில் கிட்டத்தட்ட கடைசி இடத்தில் இந்தியா!

பசுமை நாடுகள் பட்டியலில் கிட்டத்தட்ட கடைசி இடத்தில் இந்தியா!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதைத் தொடர்ந்து ஜனவரி 24-ம் தேதி காற்று மாசு மற்றும் காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய பசுமை நாடுகளுக்கான...

பரவிய செய்தி

பசுமை நாடுகள் பட்டியலில் 177 வது இடத்தில் இந்தியா. இந்த பட்டியலில் மொத்தம் 180 நாடுகள் மட்டுமே உள்ளன.

விரிவான விளக்கம்

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதைத் தொடர்ந்து ஜனவரி 24-ம் தேதி காற்று மாசு மற்றும் காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய பசுமை நாடுகளுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் பட்டியல் வெளியாகியது.

இந்த ஆய்வானது, தூய்மையான காற்று, தூய்மையான நீர், காடுகள் அழிப்பு, மீன் வளம், விவசாயம், மீத்தேன், கரியமில வாயு வெளியேற்றம், பல்லுயிர் அழிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட 10 வகையான பிரச்சினைகள் 24 வகையான அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டு கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் உலக பொருளாதார அமைப்பால் இணைந்து நடத்தபட்டது.

பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு 180 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வில் இந்தியா 177-வது இடத்தில் உள்ளது. இந்தியா பட்டியலின் இறுதி 5 இடங்களில் இடம்பிடித்துள்ளது.



2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில் 141 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 36 இடங்கள் பின்னோக்கி 177 வது இடத்திற்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 ஆசிய நாடுகள் கொண்ட பட்டியலில் பங்களாதேஷை மட்டுமே இந்தியா முந்தியுள்ளது.

இப்பட்டியலில் சுவிட்சர்லாந்து நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதை தொடர்ந்து பிரான்ஸ், டென்மார்க், மால்ட்டா, சுவீடன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான்( 169) மற்றும் சீனா(120) ஆகிய நாடுகள் பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.



இந்தியாவின் சில பகுதிகளில் வரையறுக்கப்பட்ட காற்று மாசுபாட்டை மீறி காற்று மாசுபாடு அதிகம் இருப்பதால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், பலர் இறப்பதாகவும் Institute for Health Metric And Evaluation  2016 அறிக்கை தெரிவிக்கின்றன.

காடுகளை அழிப்பது, காற்று மாசுபாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்காமல் இருப்பது, தொழிற்சாலை கழிவுகள், நீர் மேலாண்மையில் கவனமில்லாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியா பட்டியிலில் இறுதி இடங்களில் உள்ளது.

மேலும், காற்று மாசுபாட்டில்(141), விவசாயத்தில்(125), காடுகள்(68), மீன் வளம்(53),  நீர் மேலாண்மை(107) போன்றவற்றிலும் இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது.

சுருக்கமாக

2016-ல் வெளியான உலகளாவிய பசுமை நாடுகளுக்கான பட்டியலில் 141 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 177 வது இடத்திற்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க