YouTurn

நீட் தேர்விற்கு சி.எம்.சி கல்லூரி எதிர்ப்பா ?

நீட் தேர்விற்கு சி.எம்.சி கல்லூரி எதிர்ப்பா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. வலைதளங்களில் நீட் தேர்விற்கு எதிராக அதிகளவில் படங்கள், மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்களும் பகிரப்படுகின்றன. இப்படி இருக்கையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக்...

பரவிய செய்தி

நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சேர்க்கையை நிறுத்தியது சி.எம்.சி.

விரிவான விளக்கம்

நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. வலைதளங்களில் நீட் தேர்விற்கு எதிராக அதிகளவில் படங்கள், மீம்ஸ்கள் மற்றும்  வீடியோக்களும் பகிரப்படுகின்றன. இப்படி இருக்கையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி மருத்துவப் படிப்பிற்கான மாணவர்ச் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது  என்றுக் கூறி சமூக வலைதளங்களில் செய்திகள் அதிகமாக பரவி வருகின்றன. ஆனால் கல்லூரிப் பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.


 நீட் தேர்வில் சி.எம்.சி கல்லூரி பற்றி வந்த தகவல்கள் உண்மையல்ல என்றும், நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை மட்டுமே கல்லூரியின் சேர்க்கைக்கு அழைக்க இருப்பதாக கூறியுள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 300 மாணவர்களை மட்டுமே கல்லூரி நடத்தும் கலந்தாய்வுக்கு அழைப்போம் என்று தெரிவித்துள்ளனர். மேலும்,  அவர்களுக்கு கிராமப்புறப்பகுதிகளில் பணி செய்யக்கூடிய மனநிலையும், தலைமைப் பண்பும், மருத்துவராகக்கூடிய இயல்பும் இருக்கின்றதா என்று கல்லூரி தேர்வு செய்யும். இதில் தேர்வானவர்களுக்கு மட்டுமே கல்லூரியில் சீட் கிடைக்கும். இதுநாள் வரை இது போன்ற முறையை தான் கடைபிடித்து வந்துள்ளனர்.


 ஆனால் தனியார் கல்லூரிகள் தனியாக கலந்தாய்வு நடத்தக் கூடாது என்று மருத்துவ கவுன்சில் தடை செய்துள்ளது. இதை எதிர்த்து சி.எம்.சி கல்லூரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 11 தேதி அன்று வர உள்ளது. அதற்கு பிறகே கல்லூரியில் 99 எம்.பி.பி.எஸ் சீட்டுகள். 61 சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புக்கான சேர்க்கைகள் நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகம் கூறி உள்ளது. இதை தவறாக புரிந்துக் கொண்டு நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.எம்.சி மருத்துவப் படிப்பிற்கான மாணவர்  சேர்க்கையை நிறுத்தியுள்ளது என்று வதந்தியை பரப்பியுள்ளனர்.


 நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை தான் சேர்க்கைக்கு அழைப்போம் என்று தெளிவாகக் கூறியுள்ளவர்களை, நீட் தேர்விற்கு எதிரானவர்கள் என்று தவறாக நினைத்து விட்டார்களே.

சுருக்கமாக

நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை நடைபெறும் என்று சி.எம்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க