YouTurn

நீச்சல் குளத்தில் கண்களில் எரிச்சல் ஏற்பட காரணம் சிறுநீரா.

நீச்சல் குளத்தில் கண்களில் எரிச்சல் ஏற்பட காரணம் சிறுநீரா.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

நெடுநேரம் நீச்சல் குளங்களில் குளிக்கும்போது கண்கள் சிவப்பு நிறமாகி எரிச்சலடைகின்றன. அதற்கு காரணம், நீரில் கலந்துள்ள குளோரின் எனவும், சிலர் உடல் சூட்டினால் இவ்வாறு ஏற்படும் என்றும் கூறுவர். ஆனால், நாம் நினைப்பது போன்று கண்கள் சிவப்பு நிறமாகி எரிச்சலடைவதற்கு காரணம் நீரில் கலக்கும் மனிதனின்...

பரவிய செய்தி

நீச்சல் குளங்களில் குளிக்கும்போது கண்கள் சிவப்பு நிறத்தில் மாறி எரிச்சல் ஏற்படுவதற்கு காரணம் நாம் நினைப்பது போல் நீரில் கலந்துள்ள குளோரின் அல்ல, மனிதனின் சிறுநீர் கலப்பதால் அவ்வாறு ஏற்படுகின்றது.

விரிவான விளக்கம்

நெடுநேரம் நீச்சல் குளங்களில் குளிக்கும்போது கண்கள் சிவப்பு நிறமாகி எரிச்சலடைகின்றன. அதற்கு காரணம், நீரில் கலந்துள்ள குளோரின் எனவும், சிலர் உடல் சூட்டினால் இவ்வாறு ஏற்படும் என்றும் கூறுவர். ஆனால், நாம் நினைப்பது போன்று கண்கள் சிவப்பு நிறமாகி எரிச்சலடைவதற்கு காரணம் நீரில் கலக்கும் மனிதனின் சிறுநீர் அசுத்தங்கள் என்று நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.


நீரில் கலக்கும் மனிதனின் சிறுநீர் மற்றும் வியர்வை அசுத்தங்கள் குளோரினுடன் கலந்து ரசாயனக் கலவையை உருவாக்கி கண்களில் எரிச்சலை எற்படுத்துகின்றது. இத்தகைய பிரச்சனைகள் அதிகம் அளவில் உட்புற நிச்சல் குளங்களிலே உண்டாகின்றன. அதற்கு காரணம், உட்புறமாக அமைந்துள்ள நீச்சல் குளப்பகுதியில்  வெளிப்புற காற்றானது உள்நுழையாமையால் காற்றின் சுழற்சி தடைப்படுகின்றது. ஆகா, தூய்மையான காற்றானது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியுள்ளனர்.


நீச்சலின் முக்கியத்துவம் மற்றும் நோய் தடுப்பு பற்றி நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் மிசேல் ஹலவ்சா கூறுகையில், ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகச்சிறந்த வழியான உடற்பயிற்சி தான் நீச்சல் ஆகும். நீச்சல் குளங்களைப் பயன்படுத்துபவர்கள் தங்களை தாங்களே தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.


குறிப்பாக, தொற்று நோய்கள் பரவாமல் இருக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், நீச்சல் குளங்களை பயன்படுத்தும் முன்பு ஷோவேரில் முழுவதுமாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நீச்சல் குளங்களில் உள்ள குளோரினின் தன்மையை கண்டறியும் கருவியை பயன்படுத்துவது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.


ஆகா, வியர்வை மற்றும் சிறுநீரால் குளங்களை அசுத்தம் செய்வதைவிடுத்து சுத்தமாக பயன்படுத்தி வந்தால் கண் எரிச்சல் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

சுருக்கமாக

நீச்சல் குளங்களில் குளித்தப் பிறகு கண்கள் சிவப்பு நிறமாவதற்கு நீரில் கலக்கப்படும் குளோரின் காரணம் இல்லை எனவும், நீரில் சிறுநீர் அசுத்தங்கள் கலப்பதால் எரிச்சல் ஏற்படுகின்றன என்று நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க