YouTurn

தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை.

தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்குப் பள்ளி நிர்வாகம் தண்டனை வழங்கியச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியானச் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பாலக்கரை கீழ்ப்புதூர் பகுதியில் சர்வைட் மெட்ரிக்குலேஷன் என்ற பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது தீபாவளி...

பரவிய செய்தி

திருச்சி தனியார் பள்ளியில் தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனையும், கொண்டாடாதவர்களுக்கு பாராட்டு கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.

விரிவான விளக்கம்

தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்குப் பள்ளி நிர்வாகம் தண்டனை வழங்கியச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியானச் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி பாலக்கரை கீழ்ப்புதூர் பகுதியில் சர்வைட் மெட்ரிக்குலேஷன் என்ற பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது தீபாவளி விடுமுறைகள் முடிந்து பள்ளிக்கு சென்றுள்ளனர். பள்ளியில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு நடைபெறும் இறைவணக்கம் கூட்டத்தில் யார் யார் எல்லாம் தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடினீர்கள் என்று கேட்கப்பட்டுள்ளது. அதில், பட்டாசு வெடித்ததாகக் கூறியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை வழங்கியது மட்டுமல்லாமல், பட்டாசு வெடித்தவர்கள் இருளின் பிள்ளைகள் என்று தலைமையாசிரியர் கூறியுள்ளார் . எனவே பாவம் செய்ததாகக் கடவுளிடம் மன்னிப்பும் கேட்க வைத்துள்ளனர். மேலும், அதே பள்ளியில் தீபாவளிக்காக கையில் மருதாணி வைத்திருந்த மாணவிக்கு அடி விழுந்ததாக அம்மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.


 


   இப்படி இருக்கையில், தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடவில்லை என்றுக் கூறியவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டுக்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இச்சம்பவம் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றுக்கூடி அப்பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். பின்னர், மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


இதைத் தொடர்ந்து போலீசார் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியரிடம் விசாரணையை நடத்தினர். அதில், தீபாவளிக்காக ஒலி மற்றும் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அறிவுரைகளைப் பின்பற்றி இவ்வாறு செய்ததாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் மீது திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


தீபாவளி நாளில் பட்டாசினால் ஏற்படும் மாசினை குறைக்க மாணவர்களுக்கு தண்டனை வழங்கியதாகக் கூறுவது முட்டாள்தனமான செயலாகும். ஒன்று தீபாவளிக்கு முன்பே மாணவர்களிடம் மாசுபாடு பற்றி எடுத்துக் கூறியிருக்க வேண்டும், இல்லையென்றால் மாணவர்களுக்கு இவையெல்லாம் தவறு என்று கூறியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தண்டனை வழங்கியிருப்பது மதம் சார்ந்த செயலாக அனைவரையும் பார்க்க வைத்துள்ளது.

சுருக்கமாக

தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடியதற்காக மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க