YouTurn

திருநள்ளாரில் செயற்கைக்கோள்கள் 3 நிமிடங்கள் செயலிழந்ததா ?

திருநள்ளாரில் செயற்கைக்கோள்கள் 3 நிமிடங்கள் செயலிழந்ததா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சில வருடங்களுக்கு முன்பு வலைதளங்களில் ஓர் கதை அதிகமாக பரவி வந்தது . அக்கதையானது , அமெரிக்காவின் செயற்கைக்கோள் ஒன்று பூமியை சுற்றி வரும் போது 3 நிமிடங்கள் செயல் இழந்து உள்ளன . 3 நிமிடங்களுக்கு பின் வழக்கம் போல் செயல்பட தொடங்கி உள்ளது . ஆனால் அந்த செயற்கைக்கோளில் எந்த ஒரு பழுதும் ஏற்படவில்லை . இதை...

பரவிய செய்தி

திருநள்ளார் சனிபகவான் கோவிலை கடக்கும் போது நாசாவின் செயற்கைக்கோள்கள் மூன்று நிமிடங்கள் செயல் இழந்துள்ளது . இதனால் நாசாவே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது .

விரிவான விளக்கம்

       சில வருடங்களுக்கு முன்பு வலைதளங்களில் ஓர் கதை அதிகமாக பரவி வந்தது . அக்கதையானது , அமெரிக்காவின் செயற்கைக்கோள் ஒன்று பூமியை சுற்றி வரும் போது 3 நிமிடங்கள் செயல் இழந்து உள்ளன . 3 நிமிடங்களுக்கு பின் வழக்கம் போல் செயல்பட தொடங்கி உள்ளது . ஆனால்  அந்த செயற்கைக்கோளில் எந்த ஒரு பழுதும் ஏற்படவில்லை . இதை பற்றி நாசா ஆராய்ந்து பார்த்தது , அதன் முடிவு அதிர்ச்சி மட்டுமல்லாமல் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது .


செயற்கைக்கோள் செயலிழந்த அந்த குறுப்பிட்ட இடமானது புதுச்சேரியில் அமைந்துள்ள திருநள்ளார் சனிபகவான் ஆலயம் அமைந்துள்ள பகுதி ஆகும் . இக்கோவிலின் வான்பகுதியை கடக்கும் போது எந்த ஒரு செயற்கைக்கோளும் மூன்று நிமிடங்கள் செயலிழக்க நேரிடும் . அதற்கான காரணம் சனிக்கோளில் இருந்து கண்களுக்கு புலப்படாத கருநீலக்கதிர்கள் அக்கோவிலின் மீது ஒவ்வொரு நொடியும் விழுந்து கொண்டே இருக்கின்றன . அக்கதிர்களின் அடர்த்தியானது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நடைபெறும் சனிபெயர்ச்சியின் போது 45 நாட்கள் அதிகமாக இருக்கும் .


இதனால் அப்பகுதியை கடக்கும் செயற்கைக்கோள்கள் செயலிழக்குமே தவிர பழுதடையாது . இதன் பின்னர் நாசா திருநள்ளாரில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டது . மனிதனுக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்பது நிரூபனம் ஆகியுள்ளது . இந்த கதை பல வருடங்களாக அனைவராலும் நம்பப்பட்ட கதையாகும் .


இச்செய்தி பற்றிய தகவல்கள் எதுவும் நாசாவின் இணையதளத்தில் இல்லை . மேலும் எந்தவொரு தளத்திலும் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை . இது போன்ற நிகழ்ச்சி நடக்கவே இல்லை என்பதற்கு பல காரணங்களை கூறலாம் . செயற்கைக்கோள் பூமியை சுற்றிவரும் போது அரை நொடி செயலிழந்தால் , அது பூமியை நோக்கி கீழே விழத் துவங்கி  விடும் . 8 கி.மீ/நொடி வேகத்தில் செல்லும் எந்த ஒரு பொருளையும் நொடியில் நிறுத்த இயலாது .


செயற்கைக்கோள் செயலிழக்கும் என்று வைத்துக் கொண்டாலும் புகைப்பட கருவிகளும் வேலை செய்ய இயலாது தானே . பின்னே எவ்வாறு கூகுளால் திருநள்ளாரின் படங்களை எடுக்கப்பட முடிந்தது . இவ்வாறு தவறான கதைகளால் சனிபகவானின்  புண்ணியதலத்திற்கு உள்ள நற்பெயரைக் கெடுக்க வேண்டாம் .

சுருக்கமாக

இதுபோன்ற எந்தவொரு நிகழ்வும் நடக்கவில்லை என்று இஸ்ரோவின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார் ..

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க