YouTurn

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்விற்கு நீதிமன்றம் உத்தரவு.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் தொன்மையான நாகரிகம் இருந்தற்கான பல ஆதாரங்கள் கிடைத்தன. கீழடி ஆய்வைப் பற்றிப் பெரிதும் பேசப்பட்ட பின்னரே ஆய்வானது வேகமாக நடைபெற துவங்கின. இந்த ஆய்வில் பழமையானப் பொருட்கள் பலவற்றை கண்டுபிடித்தனர். எனவே கீழடியில் அடுத்தக் கட்ட அகழாய்வை தொடங்க வேண்டும்...

பரவிய செய்தி

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்விற்கு 2 வாரங்களில் அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு.

விரிவான விளக்கம்

 சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் தொன்மையான நாகரிகம் இருந்தற்கான பல ஆதாரங்கள் கிடைத்தன. கீழடி ஆய்வைப் பற்றிப் பெரிதும் பேசப்பட்ட பின்னரே ஆய்வானது வேகமாக நடைபெற துவங்கின. இந்த ஆய்வில் பழமையானப் பொருட்கள் பலவற்றை கண்டுபிடித்தனர். எனவே கீழடியில் அடுத்தக் கட்ட அகழாய்வை தொடங்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்தன.


தற்போது மூன்றாம் கட்ட அகழ்வு ஆராய்ச்சி முடிவடையும் வேளையில், நான்காம் கட்ட அகழாய்விற்கு இரண்டு வாரங்களில் அனுமதி வழங்க வேண்டும் என்றும், கீழடியில் நடைபெற உள்ள நான்காம் கட்ட ஆய்வுப் பணிகளில் தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் அமர்வு  உத்தரவிட்டுள்ளது.


 keezhadi


   நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.சதிஷ்குமார் ஆகியோரின் தலைமையைக் கொண்ட அமர்வுப் பிறப்பித்த உத்தரவில், கீழடியில் நான்காம் கட்ட ஆய்வை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை இயக்குனர் அனுமதி வழங்க வேண்டும். அதற்கான உரிமத்தை மத்திய அரசு இரண்டு வாரங்களில் புதுப்பிக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து கீழடியில் அகழாய்வை நடத்த வேண்டும் என்று வேண்டும் என்றும், அதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.


இதற்கு முன் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழிமதி அவர்கள் தொடர்ந்த வழக்கியில், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருள்களை வைத்து அங்கேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும், கீழடி ஆராய்ச்சியில் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.


இச்சூழலில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை அமர்வு நீதிபதிகள் கீழடியின் நான்காம் கட்ட அகழாய்விற்கு இரண்டு வாரங்களில் அனுமதி வழங்க வேண்டும் என்றுக் கூறி வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

சுருக்கமாக

கீழடியில் நான்காம் கட்ட ஆய்வை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை இயக்குனர் அனுமதி வழங்க வேண்டும். அது தொடர்பான உரிமத்தை இரண்டு வாரங்களில் மத்திய அரசு புதுப்பிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து கீழடியில் அகழாய்வை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க