
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தமிழ்நாட்டின் தன்னிகரில்லா தலைவரான ஐயா காமராஜர் அவர்களுக்கு இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அவர்கள் உணவு பரிமாறுகிறார் என்று கூறிச் சில படங்கள் வலைதளங்களில் வைரலாகியது. அப்படத்தின் உண்மையான கதையை பார்ப்போமாக! சென்னை அண்ணா சாலைக்கு மற்றொரு சிறந்த அடையாளம் மற்றும் 19 ம் நூற்றாண்டிற்கு பிறகு...
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டின் தன்னிகரில்லா தலைவரான ஐயா காமராஜர் அவர்களுக்கு இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அவர்கள் உணவு பரிமாறுகிறார் என்று கூறிச் சில படங்கள் வலைதளங்களில் வைரலாகியது. அப்படத்தின் உண்மையான கதையை பார்ப்போமாக!
சென்னை அண்ணா சாலைக்கு மற்றொரு சிறந்த அடையாளம் மற்றும் 19 ம் நூற்றாண்டிற்கு பிறகு அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட ரொட்டி நிறுவனம் தான் bosotto bros. 1928 ம் ஆண்டில், மெட்ராஸ் ஆளுநர் bosotto bros அதிகாரிகளை உத்தியோகபூர்வ சமையல்காரர்களாக நியமித்து சான்றிதழ்களை வழங்கினார். இந்த சான்றிதழ்கள் இன்றளவும் அந்த பேக்கரியால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இந்நிறுவனம் பலரது கைகளுக்கு மாறினாலும் இறுதியாக பி.முஸ்லபா சௌத்ரியிடம் விற்கப்பட்டது. அதன் பின்னர் bosotto bros பேக்கரி விரிவுப்படுத்தப்பட்டது. மேலும் இந்த பேக்கரி கவிஞர் கண்ணதாசன் அவர்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாகும். இந்த பேக்கரி பற்றி கவிஞர் அவர்கள் சிறந்த பாடல்கள் சிலவற்றை எழுதியுள்ளார் என்று பேக்கரியின் மூன்றாம் தலைமுறை உரிமையாளர் திரு.ராஜ்குமார் அவர்கள் கூறியுள்ளார்.
1960 களில் தமிழ்நாட்டின் முதல்வராக பணியாற்றிய ஐயா காமராஜர் அவர்களுக்கும் தங்களது குடும்பத்திற்கும் நல்லுறவு இருந்ததாகவும், ஐயாவிற்கு ரொட்டிகள் வழங்குவது வழக்கமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி இளவரசர் அன்ட்ருவின் முதல் பிறந்தநாள் விழாவிற்கு கேக் ஒன்றை செய்யுமாறு காமராஜர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து மகாராணி அவர்கள் சென்னை வந்து சேர்ந்தார். இளவரசர் அன்ட்ருவின் பிறந்தநாள் நிகழ்ச்சியானது ராஜாஜி ஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராணி எலிசபெத் கேக்கை வெட்டும்போது அருகில் காமராஜர் ஐயா, இளவரசர் பிலிப் ஆகியோர் அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை புகைப்படமானது இன்றளவும் பேக்கரியை அலங்கரித்து வருவதாக ராஜ்குமார் அவர்கள் கூறியுள்ளார்.
இதுவே இப்புகைப்படத்திற்கு பின்னால் உள்ள உண்மையான கதையாகும். இதையறியாமல் சிலர் தவறாகப் புரிந்துக் கொண்டு வதந்தியை பரப்பியுள்ளனர். ஐயா காமராஜர் அவர்களுக்கு பெருமை சேர்காவிடினும், அவர் செய்த பல நற்காரியங்களால் பெற்ற பெருமைகளை சீர்குலைக்காமல் இருப்பதே நன்று.