YouTurn

ஏ.டி.எம் எண்ணை தலைகீழாக அழுத்தினால் போலீஸ் வருமா ?

ஏ.டி.எம் எண்ணை தலைகீழாக அழுத்தினால் போலீஸ் வருமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வங்கிகளுக்கு சென்று நமக்கு தேவையான பணத்தை எடுக்கும் வேலையை எளிமையாக்க வந்தது தான் ஏ.டி.எம் கருவிகள் . ஆனால் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதிகளில் உள்ள ஏ.டி.எம் கருவிகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள் குறைவு . அத்தகைய ஏ.டி.எம் கருவிகளில் பணம் எடுக்கும் போது கொள்ளையர்கள் வந்து உங்களை மிரட்டி பணம் எடுக்க...

பரவிய செய்தி

ஏ.டி.எம் கருவிகளில் பணம் எடுக்கும் போது கொள்ளையர்கள் உங்களை மிரட்டி பணம் எடுக்க சொன்னால் உங்களின் ஏ.டி.எம் கார்டின் ரகசிய எண்ணை தலைகீழாக அழுத்தவும் . இவ்வாறு செய்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு போலீஸ் வந்து விடும் .

விரிவான விளக்கம்

  வங்கிகளுக்கு சென்று நமக்கு தேவையான பணத்தை எடுக்கும் வேலையை எளிமையாக்க வந்தது தான் ஏ.டி.எம் கருவிகள் . ஆனால் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதிகளில் உள்ள ஏ.டி.எம் கருவிகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள் குறைவு . அத்தகைய ஏ.டி.எம் கருவிகளில் பணம் எடுக்கும் போது கொள்ளையர்கள் வந்து உங்களை மிரட்டி பணம் எடுக்க சொன்னால் உங்களின் ஏ.டி.எம் கார்டின் ரகசிய எண்ணை தலைகீழாக அழுத்தவும் . இவ்வாறு செய்தால் அங்குள்ள பாதுகாப்பு கருவிகள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு நீங்கள் இருக்கும் இடத்திற்கு போலீஸ் வந்து விடும் . பல வருடங்களாக சமூக வலைதளங்கள் போன்ற இணைய தளங்களில் இவை போன்ற செய்திகள் அதிகமாக வலம் வருகிறது .


  இவை உண்மையா என்று அறிய பல மெயில்கள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டது . இந்த யோசனை பயனுள்ளதாக இருந்தாலும் , நடைமுறையில் இது போன்ற எந்தவொரு பாதுகாப்பு அம்சமும் ஏற்படுத்தப்படவில்லை . ஏ.டி.எம் எண்களை தலைகீழாக பயன்படுத்துங்கள் என்று வரும் செய்திகள் அனைத்தும் கட்டுக்கதைகளே . மேலும் எந்தவொரு ஏ.டி.எம்களில் அவசர தலைகீழ் பின்தொழில்நுட்பம் பயன்படுத்தவில்லை என்றும் , மிகக்குறைந்த ஏ.டி.எம்களில் மட்டுமே எச்சரிக்கை பட்டன்கள் உள்ளன என்று , FTC யின் அறிக்கை கூறுகிறது .


  ஏ.டி.எம்களில் இரவில் பணம் எடுப்பதை தவிர்க்கவும் , ஆள்நடமாட்டம் இல்லாத ஏ.டி.எம்களில் பரிவர்த்தனை செய்ய வேண்டாம் . பணம் எடுக்கும் போது சுற்றியுள்ளவர்களை கண்காணிக்கவும் என்று பல அறிவுரைகளை வங்கிகள் வழங்குகின்றன .


  சமூக வலைதளங்களில் இச்செய்தி அதிகமாக பரவினாலும் பலர் இதை கேளிக்கையாக விமர்சித்து உள்ளனர் . உதாரணமாக , என்னுடைய ஏ.டி.எம் கார்டின் ரகசிய எண் 2992 என்று வைத்துக்கொண்டால் அதை தலைகீழாக அழுத்தினாலும் அதே எண் தானே வரும் என்று கேள்விகள்  எழுப்பியுள்ளனர் .

சுருக்கமாக

ஏ.டி.எம் எண்களை தலைகீழாக பயன்படுத்தினால் போலீஸ் வரும் என்ற செய்திகள் அனைத்தும் கட்டுக்கதைகளே என்று வங்கிகள் கூறியுள்ளது .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க