YouTurn

எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும்: ஆந்திர அரசு புதிய திட்டம்

எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும்: ஆந்திர அரசு புதிய திட்டம்

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஏழை மக்களின் குழந்தைகள் மட்டுமே அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதினால் மக்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்கின்றனர். இதை பயன்படுத்தி தனியார் பள்ளிகளும் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர். இதை மாற்றியமைக்க, அரசு...

பரவிய செய்தி

ஆந்திராவில் அரசு பிரதிநிதிகளின் குழந்தைகள் கட்டாயமாக அரசு பள்ளிகளில் மட்டுமே பயில வேண்டுமென சட்டம் கொண்டுவர உள்ளனர்.

விரிவான விளக்கம்

ஏழை மக்களின் குழந்தைகள் மட்டுமே அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதினால் மக்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்கின்றனர். இதை பயன்படுத்தி தனியார் பள்ளிகளும் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர்.

இதை மாற்றியமைக்க, அரசு பிரதிநிதிகளின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் மட்டுமே பயில வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவர ஆலோசித்து வருகிறது ஆந்திர அரசு. இச்சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், ஆந்திர அரசு தலைமையின் கீழ் செயல்படும் எம்.எல்.ஏக்கள். எம்.சிக்கள், அமைச்சர்கள் ஆகியோரின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் மட்டுமே பயில வேண்டும் என்று கட்டாயமாக்கப்படும்.



இது குறித்து பேசிய ஆந்திரா சுற்றுலா துறை அமைச்சர் பூமா அகிலா, அனைவருக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பது முதல்வரின் கனவு. அதனை நிறைவேற்ற, அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் தரம் உயர்த்தி நவீனமயமாக்கப்பட்டு தரமான கல்வி வழங்கப்படும்.

இதற்கான சட்ட வரைவை மட்டுமே தற்போது தயார்படுத்தி வருவதாகவும், இந்த சட்டம் அமலுக்கு வருவதற்குள் அனைத்து அரசு பள்ளிகளும் நவீனமயமாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடினார் என்றும் கூறியுள்ளார்.



என்.ஆர்.ஐ தெலுங்கு சமூகத்தின் உதவியுடன் ஆந்திர அரசு மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளின் சூழலை மேம்படுத்த உள்ளது. இவ்வருடத்தின் இறுதிக்குள் மாநிலத்தில் உள்ள 5,000 அரசு பள்ளிகளை என்.ஆர்.ஐ-ஸ் உதவியுடன் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் ஆந்திர அரசின் கீழ் செயல்படும், 13 மாவட்டங்களில் உள்ள 9,000 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தினால் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

அரசு தலைமையில் உள்ளவர்களின் குழந்தைகள் மட்டுமின்றி அரசு பணியில் உள்ள அனைவரது குழந்தைகளும் கட்டாயம் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் ஓர்  சட்டம் அமல்படுத்தினால், நாட்டில் உள்ள பல அரசு பள்ளிகளின் தரம் உயர்வதோடு ஏழை குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கும்.

சுருக்கமாக

ஆந்திராவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் நவீனமயமாக்கப்பட்ட பின் இச்சட்டத்தை அமல்படுத்த உள்ளனர். தற்போது இதற்கான சட்ட வரைவை மட்டும் தயார்படுத்தி வருகின்றனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க