YouTurn

இனி கேரளாவில் விபத்தில் சிக்கியவர்களுக்கு இலவச சிகிச்சை.

இனி கேரளாவில் விபத்தில் சிக்கியவர்களுக்கு இலவச சிகிச்சை.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கேரளாவில் நிகந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரை ஆம்புலன்சில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிகிச்சைக்கு அனுமதிக்காததால் உயிரிழந்தார். இதை போன்று விபத்தில் காயமடைந்து உரிய சிகிச்சை அளிக்காததால் பலர் இறந்துள்ளனர். இச்சம்பவங்கள் மக்களிடையே...

பரவிய செய்தி

கேரளா மாநிலத்தில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல் 48 மணி நேர சிகிச்சைக்கான மருத்துவ செலவை அரசே ஏற்கும் வகையில் ஓர் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக முதலமைச்சர் பிரணாயி விஜயன் அறிவித்துள்ளார்.

விரிவான விளக்கம்

தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கேரளாவில் நிகந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரை ஆம்புலன்சில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிகிச்சைக்கு அனுமதிக்காததால் உயிரிழந்தார். இதை போன்று விபத்தில் காயமடைந்து உரிய சிகிச்சை அளிக்காததால் பலர் இறந்துள்ளனர். இச்சம்பவங்கள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்காமல் இறந்த தமிழக இளைஞனின் மரணத்திற்கு கேரளா முதல்வர் மன்னிப்பு கோரியதோடு, சில தனியார் மருத்துவமனைகளின் மீது தகுந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இந்நிலையில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காக்க கேரளா முதல்வர் தலைமையில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கேரள முதல்வர் கூறியதாவது, விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். விபத்தில் சிக்கியவர் ஏழையா அல்லது பணக்காரனா என்ற பாகுபாடின்றி 48 மணி நேரத்திற்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். அவர்களிடம் எத்தகைய தொகையையும் வாங்க கூடாது. அதற்கான பணத்தை அரசே செலுத்தும், பின்னர் அந்த பணமானது இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும்.


மேலும், விபத்தில் சிக்கியவர்களுக்கு அரசு ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காத பட்சத்தில் அருகில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ்கள் உதவிக்கு அனுப்பப்படும். எனினும், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லும் போது அதற்கென பணம் பெறக் கூடாது.


 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் உடல்களை பணத்தைச் செலுத்தினால் தான் தருவோம் என்று கூறினாலும் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பிரணாயி விஜயன் தெரிவித்துள்ளார்.


2016 ஆம் ஆண்டு கர்நாடகவில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்கு 48 மணி நேர இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். இதே போல் டெல்லியிலும் விபத்தில் சிக்கியவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டெல்லி சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்கு விபத்து தொடர்பான “ Good Samaritan Policy ” என்ற திட்டத்தை தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

சுருக்கமாக

விபத்தில் காயமடைந்தவர்கள் யாராக இருந்தாலும் அவரின் உயிரைக் காக்க தனியார் மருத்துவமனைகள் 48 மணி நேரதிற்கு இலவசமாக சிகிச்சை அளித்திட வேண்டும் என்று கேரள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க