YouTurn

ஆந்திராவில் கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடிப்பு.

ஆந்திராவில் கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடிப்பு.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் இந்திய அரசுக்கு சொந்தமான கெயில் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு எடுக்கும் வயல்கள் உள்ளன . கெயில் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு செயலாக்க மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்று ஆகும் . இந்நிலையில் 27 ஜூலை 2௦14 ஆண்டு அதிகாலை 5.3௦ மணிக்கு நகரத்தின்...

பரவிய செய்தி

ஆந்திராவில் உள்ள கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய்களில் ஏற்பட்ட தீவிபத்தால் 15 பேர் இறந்துள்ளனர் . மேலும் 1௦ க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் .

விரிவான விளக்கம்

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் இந்திய அரசுக்கு சொந்தமான கெயில் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு எடுக்கும் வயல்கள் உள்ளன . கெயில் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு செயலாக்க மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்று ஆகும் . இந்நிலையில் 27 ஜூலை 2௦14 ஆண்டு அதிகாலை 5.3௦ மணிக்கு நகரத்தின் சுற்றுவட்டாரத்தில் பதிக்கப்பட்டு இருந்த எரிவாயு குழாய்கள் வெடித்து சிதறியதால் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் தீ பற்றி எரிந்தது . இந்த விபத்தால் குண்டுகள் வெடித்தது போன்ற பெரிய பள்ளங்களும் , குழிகளும் ஏற்பட்டுள்ளன .


இவ்வாறு திடிரென ஏற்பட்ட விபத்தால் 15 பேர் இறந்து உள்ளனர் , மேலும் 10 க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் . விபத்து எற்பட்ட பகுதியில் உள்ள வீடு மற்றும் தென்னந்தோப்புகளும் எரிந்து நாசமாகின .


 இது பற்றி நிறுவனத்தின் பி.சி திரிபாதி கூறுகையில் , விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் , நிவாரணம் நடவடிக்கை நடப்பதாக  கூறியுள்ளார் . இந்த விபத்தில் 15 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார் . இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு எண்ணெய் அமைச்சகத்திற்கும் , நிறுவனத்தின் தலைவருக்கும் உத்தரவு பிறப்பித்தார் . விசாரணைக்கு பிறகு அந்நிறுவனத்தின் அதிகாரிகள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர் . இந்த விபத்து நடந்து சில ஆண்டுகள் ஆனாலும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் இன்றளவும் அச்சத்தில் உள்ளனர் .


பலநாட்களாக வாயுக்கசிவு உள்ளது என மக்கள் புகார்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர் . நாடு முழுவதும் இது போன்ற எரிவாயு எடுக்கும் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன .


வளர்ச்சி என்பது மக்களின் வாழ்க்கை தரம் மாற்றத்தை பொறுத்தே இருக்க வேண்டுமே தவிர உயிர்களுடன் விளையாட கூடியதாக இருக்கக் கூடாது . இதை போன்ற விபத்துகள் வேறெங்கும் நடக்க வாய்ப்பில்லை என்று எந்த எரிவாயு நிறுவனத்தாலும் உறுதி அளிக்க இயலாது .

சுருக்கமாக

எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதால் 15 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் , 1௦ க்கும் மேற்பட்டோர் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டனர் ..

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க