YouTurn

அரசு மருத்துவமனையின் திசைப் பலகையில் தமிழ் இல்லையா?

அரசு மருத்துவமனையின் திசைப் பலகையில் தமிழ் இல்லையா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அதிகளவில் தோல் ஏற்றுமதி செய்யும் நகரங்களில் ஒன்று. அங்குள்ள அரசு மருத்துவமனையில் அமைத்திற்கும் பகுதிகளை அறிந்துக் கொள்ள ஏதுவாக திசைப் பலகை வைக்கப்பட்டிற்கும். அதில், தமிழ் மொழியை தவிர்த்து ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் மட்டுமே பெயர்கள்...

பரவிய செய்தி

வாணியம்பாடி அரசு மருத்துவமனையின் திசைப் பலகையில் தமிழ் மொழி இல்லை. திசைப் பலகையில் ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் மட்டுமே பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

விரிவான விளக்கம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அதிகளவில் தோல் ஏற்றுமதி செய்யும் நகரங்களில் ஒன்று. அங்குள்ள அரசு மருத்துவமனையில் அமைத்திற்கும் பகுதிகளை அறிந்துக் கொள்ள ஏதுவாக திசைப் பலகை வைக்கப்பட்டிற்கும். அதில், தமிழ் மொழியை தவிர்த்து ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் மட்டுமே பெயர்கள் எழுதப்பட்டிருப்பதாகக் கூறி முகநூலில் சில பக்கங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.



   இவ்வாறு பரவியச் செய்தி உண்மையில்லை என்று நிரூபிக்கும் வகையில், களத்திற்கே சென்று நமது you turnநண்பர் ஒருவர் எடுத்த வீடியோ பதிவை ஆதாரமாக பதிவு செய்துள்ளோம்.


ஆதாரமாக பதிவிட்ட வீடியோ பதிவில், திசைப் பலகையின் பின்புறத்தில் சிகிச்சைப் பிரிவு போன்ற பகுதிகளின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் ஒரே வரியாக எழுதப்பட்டிருக்கும். அந்த பலகையின் முன்புறத்திற்கு சென்று பார்த்தால், ஆண்கள் பிரிவு, பிணவறை, தேநீர் நிலையம், தலைமை மருத்துவ அலுவலர் அறை, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு என்று தூய்மையான தமிழிலே இடம்பெற்றிக்கும்.


இதை அறியாமல் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலம் மற்றும் உருதுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறி மொழி சண்டையை தூண்டும் விதத்தில் சமூக வலைதளத்தில் மீம்ஸ் போன்ற பதிவுகளை வெளியிட்டனர். உருது மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிடுகின்றனர். எனினும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழை நீக்கி இந்தியை திணிக்கும்போது வராத கோபம், மூன்றாம் மொழியாக உருது இடம்பெற்றிருப்பதற்கு மட்டும் ஏன் இத்தகைய கோபங்கள்!.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க