YouTurn

அரசு மருத்துவமனைகளின் சில பகுதிகள் தனியாருக்கு குத்தகை.

அரசு மருத்துவமனைகளின் சில பகுதிகள் தனியாருக்கு குத்தகை.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

மாவட்ட அரசு மருத்துவமனைகளில் குறுப்பிட சேவைகளை மட்டும் தனியாருக்கு 3௦ ஆண்டுகள் குத்தகைக்கு விடலாம் என்று சுகாதார அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது. உலக வங்கியுடன் கலந்து ஆலோசித்தப்பிறகு 140 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை தாக்கல் செய்தனர். அதில், இரண்டு அல்லது மூன்று மாவட்ட மருத்துவமனைகளின்...

பரவிய செய்தி

அரசு மருத்துவமனைகளின் சில பகுதிகளை 30 ஆண்டுகளுக்கு தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என்று நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.

விரிவான விளக்கம்

 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் குறுப்பிட சேவைகளை மட்டும் தனியாருக்கு 3௦ ஆண்டுகள் குத்தகைக்கு விடலாம் என்று சுகாதார அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது.


  உலக வங்கியுடன் கலந்து ஆலோசித்தப்பிறகு 140 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை தாக்கல் செய்தனர். அதில், இரண்டு அல்லது மூன்று மாவட்ட மருத்துவமனைகளின் சில பகுதிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த பொது மற்றும் தனியார்க் கூட்டு சேவையில் இதய நோய், நுரையீரல் நோய் மற்றும் புற்றுநோய் பராமரிப்பு போன்ற குறிப்பிட்ட சேவைகள் மட்டும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பாக நிதி ஆயோக் மூலம் தயாரிக்கப்பட்ட மாதிரி ஒப்பந்தம் ஒன்றை மாநில அரசுகளுக்கு நிதி ஆயோகின் பிரதான அதிகாரியான அமிதாப் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.


  இது பற்றி இந்திய மக்கள் சுகாதார இயக்கத்தின் அமைப்பாளர் டாக்டர் அமித் செங்குப்தா கூறுகையில், நிதி ஆயோக் ஒரு ஆலோசனைக் குழுவாக இருக்க வேண்டும். ஆனால் இங்கோ அவசர அவசரமாக பொதுத்துறை சொத்துகளை தனியாருக்கு அளிக்கும் விதத்தில் செயல்படுகிறது. இந்த திட்டம் இலவசமாக கிடைக்கும் பொது சேவையை அகற்றுவதற்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.


 tamilnadu peoples


  இத்திட்டத்தின்படி மாவட்ட மருத்துவமனைகளில் 50 படுக்கைகளை தனியாருக்கு அளிக்க வேண்டும், மேலும் அரசு மருத்துவமனைகளின் சுற்றுப்பகுதிகளில் தனியார் மருத்துவமனைகள் கட்ட அனுமதி அளிக்க வேண்டும், தேவையான நிதியையும் மாநில அரசாங்கமே அளிக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூறியுள்ளது. மேலும் தனியாரானது அரசு மருத்துவமனைகளின் இரத்த வங்கிகள், ஆம்புலன்ஸ் மற்றும் பிணவறை போன்றவற்றைப் பகிர்ந்துக் கொள்ளும்.


 ஏழை மக்களுக்கு இலவசப் படுக்கைகள் வழங்குவது பற்றி எந்தவொரு தெளிவான அறிவிப்பும் அதில் இல்லை. வறுமைக்கோட்டிற்கு கீழ் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களில் உள்ளவர்கள் மட்டுமே இலவச சேவையைப் பெற முடியும் என்றுக் கூறியிருப்பது, அரசு மருத்துவ சேவைகளை மட்டுமே நம்பியுள்ளவர்களை ஒதுக்கி வைக்கும் செயலாகும்.


  நிதி ஆயோக் திட்டத்தின்படி நடவடிக்கைகள் தொடர்ந்தால் அரசு மருத்துவமனைகளும், மக்கள் நலப் பணிகளும் கடுமையாக பாதிக்கும்.

சுருக்கமாக

மாவட்ட மருத்துவமனைகளின் சில பகுதிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என்று நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க