YouTurn

அரசு பள்ளி மாணவனுக்கு கூகுளில் வேலையா ?

அரசு பள்ளி மாணவனுக்கு கூகுளில் வேலையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சண்டிகரில் அரசு பள்ளியில் பயின்ற மாணவன் ஹர்சித் ஷர்மா என்பவருக்கு மாதம் 12 லட்சம் ஊதியத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது என்ற செய்தி இந்தியா முழுவதும் பரவியது . ஹர்சித் ஷர்மா என்ற மாணவனுக்கு கூகுள் நிறுவனத்தில் கிடைத்துள்ளதாக கூறி ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது . அதை முதலில்...

பரவிய செய்தி

17 வயது அரசு பள்ளி மாணவனுக்கு கூகுள் நிறுவனத்தில் மாதம் 12 லட்சம் ஊதியத்தில் வேலை .

விரிவான விளக்கம்

சண்டிகரில் அரசு பள்ளியில் பயின்ற மாணவன் ஹர்சித் ஷர்மா என்பவருக்கு மாதம் 12 லட்சம் ஊதியத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது என்ற செய்தி இந்தியா முழுவதும் பரவியது .


ஹர்சித் ஷர்மா என்ற மாணவனுக்கு கூகுள் நிறுவனத்தில் கிடைத்துள்ளதாக கூறி ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது . அதை முதலில் நம்பவில்லை என்றாலும் , அதை பற்றி தனது தலைமை ஆசிரியருக்கு மாணவன் தெரிவித்துள்ளான் . அதன்பின் தலைமை ஆசிரியர் பத்திரிக்கைக்கு கூறியதால் இச்செய்தி ஊடகங்கள் மூலம் வேகமாக பரவியது என்றும் , இதனால் தனது மக்கனின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மாணவனின் தாயார் பாரதி ஷர்மா கூறியுள்ளார் . மேலும் பத்திரிகைக்கு கொடுக்கப்பட்ட வேலை பற்றிய கடிதம் ஏதும் தாங்கள் அளிக்கவில்லை . தன் மகனுக்கு வந்தது தொலைபேசி அழைப்பு மட்டுமே தவிர கடிதம் ஏதும் வரவில்லை என்றும் கூறினார் .


ஹர்சித் ஷர்மா அரசு இரண்டாம்நிலைப்பள்ளியில் இந்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பை நிறைவு செய்துள்ளார் . அவருக்கு டிசைனர் வேலைகளில் ஆர்வம் அதிகம் . மேலும் தனக்கு வந்த  தவறான அழைப்பை தலைமை ஆசிரியருக்கு தெரிவித்ததால் அந்த பள்ளி செய்தி அறிக்கை ஒன்றை ஜூலை 29 அன்று வெளியிட்டது . அதில் மாணவன் ஹர்சித் ஷர்மா மாதம் 12 லட்சம் ஊதியத்தில் கூகுளில் டிசைனர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .


மேலும் அவருக்கு நிறுவனத்தில் மாதம் 4 லட்சம் ஊதியத்துடன் ஒரு வருட பயிற்சி வழங்கப்படும் . பயிற்சிக்கு பின்னர் மாதம் 12 லட்சம் ஊதியம் பெறுவார் என்று அறிக்கையில் இருந்தது .


இது பற்றி விவரங்களை கூகுள் நிறுவனத்திடம் கேட்டபோது ஹர்சித் ஷர்மா என்பவருக்கு வேலை சார்ந்த பதிவுகள் இல்லை என்று கூறியுள்ளனர் . இதை தொடர்ந்து பள்ளியின் அறிக்கைப் பற்றி நடவடிக்கை எடுக்குமாறு சண்டிகர் பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது . அந்த மாணவனை தொடர்பு கொண்ட போது அழைப்பை பற்றி மட்டுமே தான் கூறியதாகவும் , வேறு எதுவும் கூறவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் .

சுருக்கமாக

தவறான தொலைபேசி அழைப்பால் இச்செய்தி இந்தியா முழுவதும் பரவியுள்ளது .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க