YouTurn

அதானி மனைவியின் முன் தலைகுனிந்தாரா மோடி ?

அதானி மனைவியின் முன் தலைகுனிந்தாரா மோடி ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

யார் இந்த பெண்மணி? எதாவது நாட்டின் ஜனாதிபதியா ? நீதிமன்றத்தின் நீதிபதியா? சுதந்திரப் போராட்ட வீராங்கனையா ? நாட்டிற்காக உயிர் நீத்த தியாகியின் மனைவியா ? அல்ல நாட்டின் வளர்சிக்காக தனது சொத்துக்களை எல்லாம் அரசுக்கு தானம் செய்தவரா ?. இவற்றில் எதுவுமே இல்லை. 72 ஆயிரம் கோடிகளுக்கு மேல் இந்திய அரசிற்கு...

பரவிய செய்தி

இந்திய அரசிற்கு பல்லாயிரம் கோடி வரிபாக்கி வைத்திருக்கும் குஜராத் கார்ப்பரேட் முதலாளி அதானியின் மனைவிக்கு தலைகுனிந்து மரியாதை செலுத்தும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

விரிவான விளக்கம்

யார் இந்த பெண்மணி? எதாவது நாட்டின் ஜனாதிபதியா ? நீதிமன்றத்தின் நீதிபதியா? சுதந்திரப் போராட்ட வீராங்கனையா ? நாட்டிற்காக உயிர் நீத்த தியாகியின் மனைவியா ? அல்ல நாட்டின் வளர்சிக்காக தனது சொத்துக்களை எல்லாம் அரசுக்கு தானம் செய்தவரா ?. இவற்றில் எதுவுமே இல்லை.


72 ஆயிரம் கோடிகளுக்கு மேல் இந்திய அரசிற்கு வரிபாக்கி வைத்திருக்கும் கார்ப்பரேட் பீமன் குஜராத் தொழிலதிபர் அதானியின் மனைவியின் முன்பு தலைகுனிந்து நிற்கும் நமது தேசப் பிரதமர் என்றுக் கூறி இப்படங்கள் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகியுள்ளன.


ஆனால், இவ்வாறு கூறியது அனைத்தும் உண்மையல்லவே. அதானியின் மனைவி என்று பரவியப் படத்தில் இருப்பவர் தும்கூர் மாநகராட்சியின் மேயர் ஆவார்.


திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்திய பிரதமராக பதவியேற்றப் பிறகு 2014 செப்டம்பர் 24-ம் தேதி முதல் முறையாக கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். அவரை முன்னாள் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் வரவேற்றுள்ளனர். கர்நாடகாவிற்கு சென்ற மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.


இறுதியாக தும்கூர் மாவட்டம் குப்பி தாலுக்கா நிட்டூர் கிராமத்தில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள என்.எல்.சி நிறுவனத்தின் இராணுவ ஹெலிகாப்டர் உற்பத்தி பிரிவின் விரிவாக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்துள்ளார். அப்போது, அவரை வரவேற்ற தும்கூர் மாநகராட்சியின் மேயர் கீதா ருத்ரேஷ்க்கு மரியாதை செலுத்தும் விதமாக மோடி வணங்கியுள்ளார்.


ஆனால், மோடி அவர்கள் வணங்கியது தும்கூர் மேயர் என்று அறியாமல் அதானியின் மனைவியை வணங்கியதாகக் கூறித் தவறான செய்திகளைச் சிலர் பரப்பி வருகின்றனர்.

சுருக்கமாக

24 செப்டம்பர் 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி அவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு சென்ற போது, தும்கூரின் மேயர் கீதா ருத்ரேஷை மரியாதை நிமித்தமாக வணங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க