YouTurn

சீதையாக கரீனா கபூர் நடிப்பதற்கு உருவான எதிர்ப்புகள்.. படக்குழு விளக்கம் !

சீதையாக கரீனா கபூர் நடிப்பதற்கு உருவான எதிர்ப்புகள்.. படக்குழு விளக்கம் !
இந்திய திரைத்துறையில் சரித்திர கால கதைகளை மையமாகக் கொண்டு திரைப்படங்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இராமாயணக் கதையை சீதையின் பார்வையில் கதை நகர்வது போல் 3டி தொழில் நுட்பத்தில் திரைப்படம் ஒன்று எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

இத்திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை சீதையாக நடிக்க தேர்வு செய்து உள்ளதாகவும், அதற்கு அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்பதாகவும், அதுகுறித்து படக்குழு யோசித்து வருவதாக செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகின. அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகாத நிலையிலேயே செய்திகள் வெளியாகி வந்தன.
இதையடுத்து, சீதையாக கரீனா கபூர் நடிக்க எதிர்ப்புகள் கிளம்ப துவங்கியது. சீதையாக கரீனா கபூர் நடிப்பதாக தமிழில் வெளியான செய்திகளின் கமெண்ட்களிலேயே பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து பதிவிட்டனர். கரீனா கபூரை புறக்கணிக்க வேண்டும் என ஹாஷ்டாக் உடன் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் மீம்கள், வீடியோக்கள் மூலம் எதிர்ப்புகள் உண்டான. சீதையாக கங்கனாவை நடிக்க வைக்கலாம் எனவும் பதிவிட்டு வருகிறார்கள்.





இந்நிலையில்,  இயக்குனர் ஆலகிக் தேசாய் மற்றும் படக்குழுவினர் " SITA - The Incarnation " எனும் இன்ஸ்டா பக்கத்தில், நாங்கள் இன்னும் படப்பிடிப்பிற்கு முந்தைய கட்டத்தில் இருக்கிறோம். சீதையாக கரீனா கபூரை அணுகியதாக வதந்திகள் பரவி வருகிறது. விரைவில் யார் நடிக்க இருக்கிறார் என அறிவிக்கப்படும். இந்த பக்கத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் " எனக் கூறப்பட்டுள்ளது.

 .

இதுகுறித்து, சீதா திரைப்படத்திற்கு கதை எழுதி வரும் விஜயேந்திர பிரசாத் அவர்களும், " எனக்கு தெரிந்த வரை படத்தின் இயக்குனர் ஆலகிக் தேசாய் சீதாவாக நடிக்க கரீனா கபூர் கானிடம் கேட்கவில்லை " எனத் தெரிவித்து இருக்கிறார்.

.

சீதையாக கரீனா கபூர் நடிக்கிறார், 12 கோடி சம்பளம் எனும் செய்திகளுக்கும், அதற்கு எதிராக எழுந்த பதிவுகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் திரைப்படக் குழு தரப்பில் மறுப்பும், விளக்கமும் அளிக்கப்பட்டு இருக்கிறது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை