YouTurn

பொருளாதாரம் குறித்து ரத்தன் டாடாவின் கருத்து என போலியான போஸ்ட் !

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் குழு அறிவித்து உள்ளதற்கு எதிராக ரத்தன் டாடா " இந்த நிபுணர்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால், மனிதர்களின் செயல்நோக்கம் மற்றும் உறுதியான முயற்சிகளின் மதிப்பு பற்றி அவர்களுக்கு ஏதும்...

பொருளாதாரம் குறித்து ரத்தன் டாடாவின் கருத்து என போலியான போஸ்ட் !
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் குழு அறிவித்து உள்ளதற்கு எதிராக ரத்தன் டாடா " இந்த நிபுணர்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால், மனிதர்களின் செயல்நோக்கம் மற்றும் உறுதியான முயற்சிகளின் மதிப்பு பற்றி அவர்களுக்கு ஏதும் தெரியாது என்பது எனக்குத் தெரியும் " எனக் கூறியுள்ளதாக நீண்ட கருத்து ஒன்று இந்திய மக்களை நம்பிக்கையூட்டும் விதத்தில் உலாவி வருகிறது.



இதை வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவையில் ரத்தன் டாடாவின் நம்பிக்கையூட்டும் கருத்து என அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், ரத்தன் டாடா தரப்பில் இருந்து அப்படியொரு கருத்து வெளியிடப்படவில்லை என மறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

ஏப்ரல் 10-ம் தேதி ரத்தன் டாடாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " இந்த போஸ்டில் இருப்பதை நான் சொல்லவும் இல்லை, என்னால் எழுதப்படவில்லை. வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதை ஊடகங்கள் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் அதை என்னுடைய அதிகாரப்பூர்வ சேனல்களில் கூறுவேன். நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் " என வைரல் பதிவுடன் தெரிவித்து உள்ளார்.



Twitter link | archive link 

கொரோனா வைரசிற்கு எதிராக போராடுவதற்கு நிதியுதவியாக  டாடா தரப்பில் இருந்து பெரும் தொகை அறிவிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் டாடா நிறுவனத்திற்கு மீது மதிப்பை கூட்டியது. இதையடுத்து, ரத்தன் டாடா கூறியதாக போலியான போஸ்ட்டை வைரல் செய்து வருகிறார்கள்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை