YouTurn

இராமநாதபுரம் அருண் பிரகாஷ் கொலை சம்பவம்| மதப் பிரச்சனை இல்லையென காவல்துறை தகவல் !

இராமநாதபுரம் அருண் பிரகாஷ் கொலை சம்பவம்| மதப் பிரச்சனை இல்லையென காவல்துறை தகவல் !
இராமநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த 23 வயதான அருண் பிரகாஷ் மற்றும் 20 வயதான யோகேஸ்வரன் ஆகிய இருவரும் கள்ளர் தெரு சந்திப்பில் நின்று கொண்டிருக்கும் போது மோட்டார் வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் அவ்விருவரையும் வளைத்து தாக்கியுள்ளனர். தப்பிக்க முயன்ற இருவரையும் துரத்திய கும்பல் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் தாக்கி இருக்கிறார்கள்.

இதனால் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு இராமநாதபுர அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அருண் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யோகேஸ்வரன் அங்கு சிகிச்சை பெற்ற பிறகு தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடற்கூராய்வு முடிந்த பிறகு அருண் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து, காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இராமநாதபுரம் கொலை சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவத் துவங்கி உள்ளது. அருண் பிரகாஷ் கொலைக்கு நீதி வேண்டும் என இந்திய அளவிலும் கூட பதிவுகள் வெளியாகி வருகின்றன. மறுபுறம், அருண் பிரகாஷ் கொலை மதம் சார்ந்த கொலை என்றும், அதற்கான நீதி வேண்டுமென பதிவிட்டு வருகிறார்கள்.



Twitter link | archive link 





Facebook link | archive link 



Facebook link | archive link  



Facebook link | archive link  

அருண் பிரகாஷ் கொலை இஸ்லாமிய அடிப்படைவாத கும்பலால் நிகழ்ந்ததாக சமூக வலைதளங்களில் பரவத் துவங்கிய பிறகு இராமநாதபுரம் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

" இராமநாதபுரம் மாவட்டத்தில் வசந்தம் நகரில் 31.08.2020-ம் தேதி அன்று நடந்த அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர் " என இராமநாதபுர காவல்துறையின் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி இருக்கிறது.



Facebook link | archive link



Twitter link | archive link

தி ஹிந்து செய்தியில், " அருண் பிரகாஷ் கொலை சம்பவத்தில் ரியாஸ், காமாட்சி, சுரேஷ் மற்றும் ஷாஹுல் அமீத் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், ஷீக் அப்துல் ரஹ்மான் மற்றும் சரவணன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருவதாகவும் " வெளியாகி இருக்கிறது.



" அருண் பிரகாஷ் கொலை மதவாத காரணம் அல்ல, தனிப்பட்ட முன்பகை காரணமாக நிகழ்ந்தது " என மாவட்ட எஸ்பி வருண் குமார் தெரிவித்து இருக்கிறார்

அருண் பிரகாஷ் கொலை வழக்கில் லெப்ட் சேக், சதாம், வாக்கிம், இம்ரான் கான், அசார், சரவணன், வெற்றி, காமாட்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 3 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும், மதம் சார்ந்த வதந்திகளை பரப்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் கேட்டுக்.கொண்டுள்ளனர்.

Link : 

Youth killed in Ramanathapuram; four held
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை