YouTurn

குடும்பத்தினரே ஓட்டுப் போடவில்லை என அழுதவர் பெற்ற வாக்கு எவ்வளவு தெரியுமா ?

எனது குடும்பத்தில் மொத்தம் 9 பேர் இருந்தும், அதில் 4 பேர் எனக்கு ஓட்டு போடவில்லை, மொத்தம் 5 வாக்குகளை மட்டுமே பெற்றதால் கதறி அழுத சுயேட்சை வேட்பாளர் பற்றி தேர்தல் முடிவு வெளியான நாளில் அனைத்து செய்தியிலும் கண்டு இருப்போம். பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியை சேர்ந்த நீத்து சட்டர்ன் வாலா என்பவர்...

குடும்பத்தினரே ஓட்டுப் போடவில்லை என அழுதவர் பெற்ற வாக்கு எவ்வளவு தெரியுமா ?
எனது குடும்பத்தில் மொத்தம் 9 பேர் இருந்தும், அதில் 4 பேர் எனக்கு ஓட்டு போடவில்லை, மொத்தம் 5 வாக்குகளை மட்டுமே பெற்றதால் கதறி அழுத சுயேட்சை வேட்பாளர் பற்றி தேர்தல் முடிவு வெளியான நாளில் அனைத்து செய்தியிலும் கண்டு இருப்போம்.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியை சேர்ந்த நீத்து சட்டர்ன் வாலா என்பவர் ஜலந்தர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஆக போட்டியிட்டார். தேர்தல் முடிவு வெளியான மே 23-ம் தேதி அவரை பேட்டியெடுத்த பஞ்சாப் சேனலில் பேசிய போது தன் குடும்பத்தில் இருப்பதோ 9 வாக்கு, ஆனால் பெற்றது 5 வாக்கு மட்டுமே என கதறி அழுதார் .



நீத்து சட்டர்ன் அழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரல் ஆகி அனைத்து செய்திகளிலும் வெளியாகியது.


குடும்பத்தினரையே கூட நம்பக் கூடாது, மின்னனு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக பலரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். ஆனால், முதல் சுற்றின் இறுதியில் நீத்து சட்டர்ன் வாலா பெற்ற வாக்குகளே 5 .

இறுதி சுற்றில் அவரின் வாக்குகள் 856 ஆக உயர்ந்து இருந்தது. முதல் சுற்றில் 5 வாக்குகளை மட்டுமே பெற்ற போது பஞ்சாப் சேனலில் பேட்டி எடுத்த நிரூபர் " உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களே உங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை, பிறகு மற்றவர்கள் எப்படி அளிப்பார்கள் " என கேட்டு இருந்தார்.

ஆனால், நீது சட்டர்ன் பெற்ற வாக்குகள் 856 என்பதை அறியாமல் பலரும் அவர் அழும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Proof :

Punjab candidate, who was crestfallen after receiving just 5 votes initially, ends up with 856
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை