YouTurn

பாகிஸ்தான் ட்ரக் முழுக்க மறைந்திருக்கும் ஆட்கள்.. இந்தியா எனப் பரப்ப முயன்றவர்கள் !

தேசிய சாலையில் நிற்கும் கண்டெய்னர் கதவை திறந்தால் உள்ளே அமைதி மார்க்கம் என கீழ்காணும் வீடியோ தற்போது தமிழில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், சாலையில் நிறுத்தப்பட்ட வாகனத்தை சோதனை செய்யும் போலீசார் கதவை திறக்கச் சொல்லும் பொழுது உள்ளே 10-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் இருப்பதை காண முடிந்தது. சமூக...

பாகிஸ்தான் ட்ரக் முழுக்க மறைந்திருக்கும் ஆட்கள்.. இந்தியா எனப் பரப்ப முயன்றவர்கள் !
தேசிய சாலையில் நிற்கும் கண்டெய்னர் கதவை திறந்தால் உள்ளே அமைதி மார்க்கம் என கீழ்காணும் வீடியோ தற்போது தமிழில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், சாலையில் நிறுத்தப்பட்ட வாகனத்தை சோதனை செய்யும் போலீசார் கதவை திறக்கச் சொல்லும் பொழுது உள்ளே 10-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் இருப்பதை காண முடிந்தது. சமூக இடைவெளியை கடைபிடிக்க சொன்னால் கூட்டமாக மறைந்து செல்வதாக இவ்வீடியோ பகிரப்படுகிறது.



Facebook link | archive link

சாலையில் உள்ள டோல் அறிவிப்பு பலகையில் இஸ்லாமாபாத் என இடம்பெற்று இருப்பதையும், காவலர்களின் உடையை வைத்தும் இந்த சம்பவம் நிகழ்ந்தது இந்தியா அல்ல, பாகிஸ்தான் என்பதை எளிதாகவே அறிந்து கொள்ளலாம். ஆனால், முதலில் இந்த வீடியோவை டெல்லியில் நிகழ்ந்ததாக பரப்பி உள்ளார்கள்.



தமிழக பாஜகவின் செயலாளர் அனு சந்திரமௌலி என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இவ்வீடியோவை டெல்லியில் நிகழ்ந்ததாக பதிவிட்டு, பின்னர் பாகிஸ்தானில் நிகழ்ந்தது என மாற்றியுள்ளார்.





Facebook link | archive link 



தமிழக பாஜக செயலாளர் தன்னுடைய பதிவை மாற்றிக் கொண்டாலும், சில முகநூல் பக்கங்கள் மற்றும் குழுக்களில் இடத்தின் பெயரை குறிப்பிடாமல் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் சம்பவம் நிகழ்ந்தது இந்தியா என தவறாக புரிந்து கொள்ள நேரிடும்.

வைரல் செய்யப்படும் வீடியோ குறித்து தேடிய பொழுது, பாகிஸ்தானில் ஊரடங்கு இருக்கும் நேரத்தில் இஸ்லாமாபாத் சாலையில் சென்ற ட்ரக் வாகனத்தில் 19 குடிமக்கள் மறைந்து இருந்த போது பிடிக்கப்பட்டதாக The Express Tribune செய்தியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.



Twitter link | archive link 

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க ஊரடங்கை அறிவித்த போது பாகிஸ்தான் நாட்டில் ட்ரக்கில் மறைந்து செல்லும் நபர்கள் பொறுப்பற்றவர்களே. பகிரும் செய்தியை உண்மையான தகவல்களுடன் பகிர்வதே சரியானது. தவறான தகவல்களை பகிர வேண்டாம்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை