ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!

ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடன் தொல்லைக்கு ஆளானவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தன.
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தமிழகத்தில் தடை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்து இருந்தது. இந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்து இருக்கிறார்.
இந்த அவசர சட்டம், 1930-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம், 1888-ம் ஆண்டு சென்னை நகரக்காவல் சட்டம் மற்றும் 1859-ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றிக்கு சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவசர சட்டத்தினபடி,

இந்தியாவில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை ஒவ்வொரு மாநிலமாக தடை செய்து வருகிறார்கள். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை இந்திய அளவில் முழுவதுமாக தடை செய்து, அதற்கு பயன்படுத்தப்படும் செயலிகளை முழுமையாக நீக்கினால் மட்டுமே சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நிகழாமல் இருக்கும்.
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தமிழகத்தில் தடை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்து இருந்தது. இந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்து இருக்கிறார்.
இந்த அவசர சட்டம், 1930-ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம், 1888-ம் ஆண்டு சென்னை நகரக்காவல் சட்டம் மற்றும் 1859-ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றிக்கு சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவசர சட்டத்தினபடி,
- இவ்விளையாட்டில் பணம் வைத்து ஈடுபடுவோரையும், அதில் ஈடுபடுத்தப்படும் கணினிகள் மற்றும் அதுதொடர்பான உபகரணங்கள் தடை செய்யப்படும்.
- தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ரூ.5,000 அபராதமும், ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
- ஆன்லைன் விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதம் மற்றும் 2 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும்.

இந்தியாவில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை ஒவ்வொரு மாநிலமாக தடை செய்து வருகிறார்கள். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை இந்திய அளவில் முழுவதுமாக தடை செய்து, அதற்கு பயன்படுத்தப்படும் செயலிகளை முழுமையாக நீக்கினால் மட்டுமே சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நிகழாமல் இருக்கும்.