YouTurn

ஓமைக்ரான் லேசானது அல்ல, அது மக்களை கொல்லவும் செய்கிறது : உலக சுகாதார மையம் !

ஓமைக்ரான் லேசானது அல்ல, அது மக்களை கொல்லவும் செய்கிறது : உலக சுகாதார மையம் !
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசான ஓமைக்ரான்/ஒமிக்கிரான் பாதிப்பு உலக நாடுகள் பலவற்றில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் டெல்டா வைரசை ஒப்பிடுகையில் ஓமைக்ரான் குறைவான தீவிரத்தன்மையை உருவாக்குகிறது எனக் கூறப்பட்டது. அதற்காக, அதை " லேசானது " என வகைப்படுத்த முடியாது என உலக சுகாதார மையம்(WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.



Twitter link 
ஜெனிவாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், டெல்டா வைரஸ் உடன் ஒப்பிடும் போது ஓமைக்ரான் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும், குறிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில், இது " லேசானது " என வகைப்படுத்தப்பட்ட வேண்டும் என்று அர்த்தமல்ல.


முந்தைய மாறுபாடுகளைப் போலவே, ஓமைக்ரான் மக்களை மருத்துவமனையில் சேர்க்கிறது மற்றும் அது மக்களைக் கொல்கிறது. உண்மையில், பாதிப்பு வழக்குகளின் பேரலை மிகவும் பெரியது மற்றும் விரைவானது " எனத் தெரிவித்து இருந்தார்.






அதிகரிக்கும் கூட்டம் மற்றும் குறைவான பணியாளர்கள் கொண்டதாக மருத்துவமனைகள் மாறி வருகிறது. இது தடுக்கக்கூடிய கோவிட்-19 மட்டுமின்றி சரியான நேரத்தில் கவனிப்பைப் பெற முடியாத பிற நோய்கள் மற்றும் காயங்களால் நோயாளிகளின் இறப்புகளுக்கு வழிவகுக்கிறது எனத் தெரிவித்து இருக்கிறார்.

.

உலக அளவில் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல நாடுகளில் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு இரவு நேரம் மற்றும் வார இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை