YouTurn

நீட் ஓ.எம்.ஆர் சீட்டே மாறி உள்ளதாக கோவை மாணவன் மனோஜ் புகார் !

நீட் ஓ.எம்.ஆர் சீட்டே மாறி உள்ளதாக கோவை மாணவன் மனோஜ் புகார் !
2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிய போது தேர்ச்சி புள்ளி விவரங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது தெரியவந்து சர்ச்சையாகியது. இதையடுத்து, குளறுபடிகள் உடன் வெளியான முடிவுகளை நீக்கி விட்டு திருத்தப்பட்ட முடிவுகளை என்.டி.ஏ மீண்டும் வெளியிட்டது. இந்நிலையில், கோவை மாணவன் மனோஜ் தன்னுடைய ஓ.எம்.ஆர் விடைத்தாளே மாறியுள்ளதாக புகார் தெரிவித்து இருக்கிறார்.

கோவை கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவர் கே.எஸ்.மனோஜ் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வை எழுதி இருந்துள்ளார். நீட் தேர்வின் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் 11-ம் தேதி ஓ.எம்.ஆர் சீட்டை பதிவிறக்கம் செய்து தனியார் பயிற்சி மையம் வெளியிட்ட விடைகளை ஒப்பிட்டு பார்க்கையில் 720-க்கு 594 மதிப்பெண்கள் பெறுவேன் என நினைத்துள்ளார்.

ஆனால், அக்டோபர் 16-ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவில் 248 மதிப்பெண்கள் மட்டுமே காட்டியுள்ளது. இதனால், மீண்டும் ஓ.எம்.ஆர் சீட்டை பதிவிறக்கம் செய்த போது முன்பு எடுத்த ஓ.எம்.ஆர் சீட்டிற்கும், தற்போதுள்ள சீட்டிற்கும் வித்தியாசம் உள்ளதாக கூறியுள்ளார்.



இதையடுத்து, தேசிய தேர்வு முகமையின் டோல் ஃபீர் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது முறையான பதில் இல்லை. ஓ.எம்.ஆர் சீட் மாறியுள்ளது குறித்து மெயில் மூலம் தொடர்ந்து புகார் தெரிவித்து வருவதாக திநியூஇந்தியன்எக்ஸ்பிரஸ் செய்திக்கு மாணவன் மனோஜ் தெரிவித்து இருக்கிறார்.

கோவை மாணவன் மனோஜ் தன்னுடைய ஓ.எம்.ஆர் சீட்டே மாறியுள்ளதாக வெளியிட்ட குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரே பதிவு எண் கொண்ட இருவேறு ஓ.எம்.ஆர் சீட்கள் பகிரப்பட்டு வருகின்றன.



Twitter link | Archive link 

அரியலூர் மாவட்டதைச் சேர்ந்த மாணவி மஞ்சு 12-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 299 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்விற்காக தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தவர் 2020 நீட் தேர்வை தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளியில் எழுதி இருந்தார். தேர்வு முடிவில் மஞ்சு 37 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளதாக வெளியாகி இருக்கிறது. ஆனால், தேர்வு முடிவில் குளறுபடிகள் இருப்பதாக மஞ்சு கூறுகிறார்.
" நீட் தேர்வு எழுதிய போது 3 கேள்விகளை தவிர்த்து மற்ற கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தேன். இதனால் 680 மதிப்பெண்கள் வரை கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தேன். ஆனால், வெறும் 37 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. 3 கேள்விகளுக்கு பதில் அளிக்காத நிலையில் 7 கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஓ.எம்.ஆர் சீட் மாறி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வின் அசல் ஓ.எம்.ஆர் சீட் காண்பிக்க வேண்டும்  " என் மஞ்சு கூறியுள்ளதாக திநியூஇந்தியன்எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.




Links :

OMR sheet doctored, alleges Coimbatore medical aspirant

Inconsistencies in NEET answer sheets alleged

NEET 2020: ‘My OMR answer sheet tampered with’
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை