YouTurn

ஊழியர்களுக்கு நவராத்திரி ஆடை நிற உத்தரவு.. எதிர்ப்பால் பின்வாங்கிய யூனியன் பேங்க் ஆப் இந்தியா !

ஊழியர்களுக்கு நவராத்திரி ஆடை நிற உத்தரவு.. எதிர்ப்பால் பின்வாங்கிய யூனியன் பேங்க் ஆப் இந்தியா !
அக்டோபர் 7 முதல் 15-ம் தேதி வரை நவராத்திரி தினங்களில் ஒன்பது நாட்களுக்கும் ஒவ்வொரு நிறத்தில் வங்கி ஊழியர்கள் உடை அணிந்து வர வேண்டும், மீறினால் ரூ.200 அபராதம் செலுத்த வேண்டும் என யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர் ஏ.ஆர். ராகவேந்திரா வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.



யூனியன் பேங்க் ஆப்  இந்தியாவின் சுற்றறிக்கை குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கக் கூறியும் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். சமூக வலைதளங்களில் சுற்றறிக்கைக்கு எதிர்ப்புகள் இருந்தாலும், வழக்கம் போல் அதற்கு இந்து மக்கள் கட்சி உள்ளிட்டோர் எதிர்வினையாற்றவும் தவறவில்லை.



Twitter link | Archive link 

இந்நிலையில், நவராத்திரிக்கு ஊழியர்களுக்கு உடை நிற கட்டுப்பாடு விதித்த சுற்றறிக்கையை யூனியன் பேங்க் ஆப் இந்தியா பின்வாங்கி இருக்கிறது.



Twitter link | Archive link  

இதுகுறித்து, எம்.பி சு.வெங்கடேசன் ட்விட்டர் பக்கத்தில், " நவராத்திரி குறித்த சுற்றறிக்கையை வாபஸ் பெற்றது யூனியன் வங்கி நிர்வாகம் . தவறை முன்பே திருத்திக் கொண்டது போல் 7 ஆம் தேதி எனக் குறிப்பிட்டு இன்று மதியம் 2 மணிக்கு வெளியிட்டுள்ளது. அரசு விதிகளை மீறி இச்சுற்றறிக்கையை வெளியிட்டவர் மீதான நடவடிக்கையை உறுதிபடுத்துவோம் " எனப் பதிவிட்டு இருக்கிறார்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை