YouTurn

தண்ணீர் குடிக்க கோவிலுக்குள் வந்த முஸ்லீம் சிறுவனை அடித்தவர் கைது !

தண்ணீர் குடிக்க கோவிலுக்குள் வந்த முஸ்லீம் சிறுவனை அடித்தவர் கைது !
தண்ணீர் குடிப்பதற்காக இந்து கோவிலுக்குள்(மந்திர்) சென்ற சிறுவனை ஒருவர் தாக்கி எடுக்கப்பட்ட 24 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.



Facebook link | Archive link 

வீடியோவில் ஒருவர் உன் பெயர், தந்தை பெயர் என்ன எனக் கேட்டதற்கு தன் பெயர் ஆசிப் என்றும், தந்தை பெயர் ஹபீப் என்றும் சிறுவன் கூறுகிறான். கோவிக்குள் என்ன செய்கிறாய் எனக் கேட்டதற்கு  தண்ணீர் குடிக்க வந்தாக பதில் கூறும் போதே சிறுவனை தாக்குகிறார் எனும் நிலைத்தகவல் உடன் பகிரப்பட்டு வருகிறது.



பிபிசியின் முன்னாள் எடிட்டரும், ஜனதாகாரிப்போர்ட்டர் உடைய நிறுவனருமான ரிபாத் ஜவைத் என்பவர் சிறுவன் தாக்கப்படும் வீடியோவை பகிர்ந்து, கோவிலில் தண்ணீர் குடித்தது தவறா, காஸியாபாத் போலீஸ் அந்த நபரை கைது செய்ய வேண்டும் என பதிவிட்டு இருந்தார்.



Archive link 

இதற்கு பதில் அளித்த காஸியாபாத் போலீஸ், வீடியோ தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், சிறுவனை அடித்தவரை கைது செய்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறுவனை அடித்து வீடியோ எடுத்தவர்கள் பீகாரைச் சேர்ந்த ஷீரங்கி நந்தன் யாதவ் மற்றும் அவரின் மகன் அஸ்வனி குமார் யாதவ் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாக காவல் துறை தெரிவித்து உள்ளது. கோவிலுக்குள் வந்த சிறுவனை தாக்கிய வீடியோ இந்திய அளவில் பகிரப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை