YouTurn

புல்வாமா நினைவு நாள்: 2019-ல் பரவிய வதந்திகளின் தொகுப்பு !

புல்வாமா நினைவு நாள்: 2019-ல் பரவிய வதந்திகளின் தொகுப்பு !
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்திய சிஆர்பிஎஃப் படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். புல்வாமா தாக்குதல் நிகழ்ந்து 2 வருடங்கள் ஆகிய நிலையில், நினைவு நாளான இன்று உயிரிழந்த வீரர்களுக்கு இந்திய மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தும் விதமாக பதிவிட்டு வருகிறார்கள். ட்விட்டரில் #PulwamaAttack எனும் ஹாஸ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

எனினும், வாட்ஸ்அப் உள்ளிட்டவையின் பதிவுகளில், 2019 தாக்குதலின் போது பரப்பப்பட்ட தவறான வீடியோவையும் இணைத்து பகிர்ந்து வருகிறார்கள். ஆகையால், 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் தொடர்பாக பரவிய தவறான வீடியோக்கள், புகைப்படங்கள், வதந்திகளை ஓர் தொகுப்பாக இதை எழுதி இருக்கிறோம்.



விரிவாக படிக்க : புல்வாமா தாக்குதலின் கடைசி நிமிட வீடியோக்கள் உண்மையா ?

புல்வாமா தாக்குதலின் கடைசி நிமிடங்கள் என இவ்விரு வீடியோக்களும் இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டன. ஆனால், முதல் வீடியோ எகிப்து நாட்டிலும், இரண்டாம் வீடியோ ஈராக் நாட்டிலும் எடுக்கப்பட்டது.



விரிவாக படிக்க : இறந்த வீரர்களின் சவப்பெட்டிகள் என பரவும் படங்கள் உண்மையா?

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் சவப்பெட்டிகள், அதைப் பார்த்து கண்ணீர் சிந்திய வீரர்கள் என இவ்விரு புகைப்படம் வைரல் செய்யப்பட்டன. ஆனால், முதல் புகைப்படம் 2017-ம் ஆண்டிலும், இரண்டாம் புகைப்படம் 2011-ம் ஆண்டிலும் எடுக்கப்பட்டது. அதேபோல், உயிரிழந்த வீரர்களின் சவப் பெட்டிகள் முன்பாக பிரதமர் மோடி கேமராவை பார்த்து வணங்கியதாக வதந்தியைப் பரப்பினர்.



விரிவாக படிக்க : புல்வாமா தாக்குதலுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீரர்கள் புகைப்படமா ?

புல்வாமா தாக்குதலுக்கு 9 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட வீரர்களின் புகைப்படம் என இப்புகைப்படம் இந்திய அளவில் வைரலாகியது. ஆனால், இப்புகைப்படம் தாக்குதலுக்கு முந்தைய மாதத்திலேயே சமூக வலைதளங்களில் பதிவாகிய வேறொரு புகைப்படம்.

விரிவாக படிக்க : இந்திய வீரர்கள் மரணத்திலும் அரசியல் லாபத்திற்காக வதந்திகள் !

இவை மட்டுமின்றி, புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் சார்ந்தும் மு.க.ஸ்டாலின், ஸ்மிருதி இரானி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை வைத்து போலியான நியூஸ் கார்டு செய்திகள் மற்றும் இறந்த வீரர்கள் என தவறான புகைப்படங்கள் வைரல் செய்யப்பட்டன.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை