YouTurn

"மீரா மிதுன்" தமிழகத்தின் ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமனமா ?

" பிக் பாஸ் " நிகழ்ச்சியின் மூலம் வெளி உலகிற்கு தெரிய வந்த மீரா மிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர். அவர் கூறும் குற்றச்சாட்டுகள், பதிவுகள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி, அவருக்கு எதிராகவே திரும்பி விடுகிறது. இந்நிலையில், நவம்பர் 14-ம் தேதி மீரா மிதுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ...

"மீரா மிதுன்" தமிழகத்தின் ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமனமா ?
" பிக் பாஸ் " நிகழ்ச்சியின் மூலம் வெளி உலகிற்கு தெரிய வந்த மீரா மிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர். அவர் கூறும் குற்றச்சாட்டுகள், பதிவுகள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி, அவருக்கு எதிராகவே திரும்பி விடுகிறது.

இந்நிலையில், நவம்பர் 14-ம் தேதி மீரா மிதுன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் , " தமிழகத்தின் சென்னைக்கான ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், தன்னிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது, உங்களை கண்காணிக்கிறேன். இனி ஓடவும் முடியாது , ஒழியவும் முடியாது " என நியமிக்கப்பட்ட கடிதம் மற்றும் ஐ.டி கார்டு என இரு புகைப்படத்தை அதற்கு ஆதாரமாக பதிவிட்டு இருந்தார்.


Twitter link | archived link

மீரா மீதும் தனது சமூக வலைதள பக்கங்களில் இப்படி பகிர்ந்த உடனே , இவர் ஊழல் தடுப்பு இயக்குநரா மற்றும் இதெல்லாம் நம்ப முடியவில்லை என்றும் பலர் கமெண்ட் செய்து வந்தனர். ஏனெனில், மீரான் மிதுன் பதிவிட்ட ஆதாரங்களில் Government of india என இடம்பெற்றதால் , மத்திய அரசின் பணி எப்படி கிடைத்தது , அதற்கு வாய்ப்பில்லை என்றனர். ஆனால், சிலரோ இது மத்திய மற்றும் மாநில அரசின் ஊழல் தடுப்பு பிரிவுகளின் லோகோ வேறு, மீரா மிதுன் வெளியிட்ட ஆதாரத்தில் இருக்கும் லோகோ வேறு எனக் குறிப்பிட்டு இருந்தனர்.

மீரா மிதுன் வெளியிட்ட " Anti corruption Communion " பற்றிய உண்மை என்ன, ஆராய்ந்து கூறுமாறு நம்மிடமும் கேட்கப்பட்டது. எனினும், ஆதாரங்கள் அடிப்படையில் கூற வேண்டும் என்பதால் தற்பொழுது அதைப் பற்றி விரிவாக எழுதுகிறோம்.


Twitter link | archived link  



மீரா மிதுனின் ட்விட்டர் பதிவில் கமெண்ட் செய்த ஒருவர் " கடிதத்தில் Volunteer Basis " எனக் குறிப்பிட்டு இருக்கிறது பாருங்கள் எனக் குறிப்பிட்டு இருந்தார். அந்த கடிதத்தில் இரண்டாவது வரியில் அப்படிதான் குறிப்பிடப்பட்டு இருக்கிறது .



Twitter link | archived link 

தமிழகத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறும் "Anti Corruption Commission " மத்திய அரசோ அல்லது மாநில அரசு உடையதோ அல்ல. அது ஒரு " தன்னார்வ விசாரணை ஏஜென்சி " . NGO அமைப்பான Anti Corruption Commission உடைய ட்விட்டர் பக்கத்தில் அவ்வாறே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இரண்டிலும் ஒரே லோகோ இருப்பதை பார்க்கலாம்.



அரசு சாரா தன்னார்வ நிறுவனத்தின் பதிவு எண் 1372 / 2018 கொண்டு தன்னார்வ அமைப்புகளின் விவரங்களில் தேடிய பொழுது " Anti Corruption Commission " என்ற NGO அமைப்பு மகாராஷ்டிராவில் கடந்த 2018-ல் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் நமக்கு கிடைத்தன .

இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஊழல் தடுப்புத்துறை " நடுவண் கண்காணிப்பு ஆணையம்  மற்றும் தமிழகத்தின் ஊழல் தடுப்புத்துறை " ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் "  என அழைக்கப்படுகின்றன .

2018-ல் பதிவு செய்யப்பட்ட Anti Corruption Commission என்ற என்.ஜி.ஓ அமைப்பால் நியமிக்கப்பட்டதாக கூறிக் கொள்ளும் மீரா மிதுன் , அதனை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் , உங்களை கண்காணிப்பதாகவும் பெரிதாக வெளியிட்டு உள்ளார் என்பதே உண்மை.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை