காவல்துறை அதிகாரியை திட்டிய மாவட்ட ஆட்சியர் | வைரலாகும் வீடியோ !
கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் அதிகாரியை அம்மாவட்ட ஆட்சியர் பொது இடத்திலேயே கடுமையான வார்த்தைகளால் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரத்தில் அத்திவரதர் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு விஐபி-களுக்கு என்று உள்ள தனி பாதையில் உரிய பாஸ் இல்லாமல் பலரையும் அனுமதித்ததாக...

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் கோவிலில் சிறப்பு தரிசனத்திற்கு விஐபி-களுக்கு என்று உள்ள தனி பாதையில் உரிய பாஸ் இல்லாமல் பலரையும் அனுமதித்ததாக காவல் ஆய்வாளர் ஒருவரை மாவட்ட ஆட்சியர் அனைவரின் முன்னிலையில் கடுமையாக வார்த்தைகளால் திட்டியதுடன், பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு விடுவதாக கூறியது வைரலாகும் வீடியோவில் இடம்பெற்று உள்ளது.

" அப்படி என்னதான் தவறு செய்திருந்தாலும் மாவட்ட ஆட்சியர் பொது இடத்தில் காவல்துறை அதிகாரியை இப்படி எல்லாம் தகாத வார்த்தைகளால் பேசுவது நியாயமா? அது சரி அந்த முக்கியமான vipனா யாரு கலெக்டர் ஐயா.. " என பல பதிவுகளில் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக வெளியான செய்தியில், " காஞ்சி அத்திவரதர் கோவிலில் முக்கிய பிரமுகர்களுக்கான பாதையில் உரிய பாஸ் இல்லாமல் பலரையும் அனுமதிப்பதால் கூட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள், பக்தர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த சமயத்தில மாவட்ட ஆட்சியர் பொன்னையா மேற்கொண்ட ஆய்வில் அனுமதிக்கப்பட்ட பலரிடமும் விஐபி பாஸ் இல்லை என அறிந்து பிறகு ஆய்வாளரை கடுமையாக திட்டியதுடன் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார் " என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக, சிறப்பு வழியில் அத்திவரதரை தரிசிக்க வழங்கப்படும் டோனர் பாஸ்களை போலியாக செய்து மக்களையும், பக்தர்களையும் ஏமாற்றும் செயல்கள் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. 500 முதல் 1000 ரூபாய் விலையில் போலியான விஐபி பாஸ்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஜூலை மாதம் தெரிவித்து இருந்தார்.