YouTurn

ஓரினச்சேர்க்கை பெற்றோர் குறித்து தமிழக பள்ளிப் பாடத்தில் இடம்பெற்றதாக வதந்தி!

ஓரினச்சேர்க்கை பெற்றோர் குறித்து தமிழக பள்ளிப் பாடத்தில் இடம்பெற்றதாக வதந்தி!
சட்டப்பூர்வமான வயதை எட்டியவர்களில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்து வாழும் ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று 2018-ம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

இந்நிலையில், தமிழக பள்ளிப் பாடப்புத்தகத்தில் குடும்பம் குறித்த பிரிவில் ஆண்-ஆண்-குழந்தை, பெண்-பெண்-குழந்தை என ஓரினச்சேர்க்கையாளர்களின் குடும்பம் குறித்து பாடம் இடம்பெற்று இருப்பதாக ஆங்கிலத்தில் இருக்கும் பாடப்புத்தக பக்கத்தின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு வைரல் செய்து வருகிறார்கள்.



Twitter link | Archive link 

ஓரினச்சேர்க்கை குறித்த புரிதலை உருவாக்கி வருவதாக பாராட்டு தெரிவித்தும், சிலர் ஓரினச்சேர்க்கையை ஊக்கப்படுத்தும் விதத்தில் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தும் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்கள். ஆனால், வைரல் செய்யப்படும் பாடப்புத்தகம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல, அது எகிப்து நாட்டின் பள்ளிப் பாடப்புத்தகம்.



2017-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி egyptindependent எனும் இணையதள செய்தியில், ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் வகையில் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற கார்ட்டூன் தொடர்பாக விசாரணையை கல்வித்துறை அமைச்சகம் தொடங்கியதாக வெளியாகி இருக்கிறது.

2017-ல் எகிப்து நாட்டின் பள்ளிப் பாடப்புத்தகத்தில் ஓரினச்சேர்க்கை பெற்றோர் குறித்த கார்ட்டூன் பக்கத்தை தமிழக பள்ளிப்பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஒன்று எனத் தவறாக பரப்பி வருகிறார்கள்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை