சட்டத்தை மீறி சாலை நடுவே திமுக, பாஜக கொடிகள்.. பிரதமரை வரவேற்க வைத்தார்களா ?

இந்நிலையில், சாலை ஒன்றின் நடுவே திமுக மற்றும் பாஜக கொடிகள் இணைந்து வரிசையாக நடப்பட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்த புகைப்படத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இடம்பெறும் பேனரும் இடம்பெற்றுள்ளது.
பிஜேபி உள்ள வந்துரும் DMK க்கு ஓட்டு போடுங்க .... 😂😂😂
Joke of the century
நாங்களே சிவப்பு கம்பளம் விரிச்சி கூட்டிட்டு வருவோம்... ஏன்னா மோடி indian PM. .
அடேய் அடேய் போன வருஷம் மோடி பாகிஸ்தான் பிரைம் மினிஸ்டரா வா இருந்தாரு?#Bjp_BteamDMK pic.twitter.com/DUXpy4BuDV
— Priya Thangavel (@priya_0706) January 3, 2022
வெற்றிகரமான தோல்வி pic.twitter.com/j8kfmIGpU2
— மண்டகஷாயம் சங்கி🚩🚩 (@dineshdhashina) January 3, 2022
எப்போதும் பிரதமர் மோடியின் வருகையை எதிர்க்கும் திமுக இம்முறை ஆட்சியில் இருப்பதால் மோடியின் வருகையை வரவேற்பதாக பேசி வருவதால் சமூக வலைதளங்களில் விவாதங்கள் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்க பாஜக, திமுக இணைந்தே கட்சிக் கொடிகளை நட்டு உள்ளதாகவும் இப்புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
எங்கு நிகழ்ந்தது ?
நாட்டின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் பேரரசி என்ற பெருமையைக் கொண்ட வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தும் மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/Za1e9acBbo
— KR Periakaruppan (@OfficeOfKRP) January 3, 2022
Twitter link
Rani Velunachiyar lived 80 years before the great Rani Jhansi & took on the might of the British East India Company & defeated them in 1780.
Unconquered she governed 16 years after that. Her generations’ still continue & the current King also participated in today’s function! pic.twitter.com/imwfAj36i7
— K.Annamalai (@annamalai_k) January 3, 2022
Twitter link
சிவகங்கையில் வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் பாஜக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட கூட்டமும் நடைபெற்றது. ஆனால், இரு கட்சிகளும் தனித்தனியாக மரியாதை செலுத்தி உள்ளனர்.
Facebook link
இவர்களுக்காக சிவகங்கை பேருந்து நிலையம் பகுதியில் ஆர்எம்ஆர் திருமண மண்டபம் அருகே உள்ள சாலையின் நடுவே திமுக மற்றும் பாஜகவினர் சட்டத்தை மீறி கொடிகளை நட்ட புகைப்படமே வைரலாகி வருகிறது. இரு கட்சிகளின் கொடிகள் வைக்கப்பட்டது பற்றி பாஜகவினர் சிலர் வீடியோ பதிவிட்டு இருக்கிறார்கள்.
Facebook link
வைரலாகும் புகைப்படம் குறித்து, பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் தென்மண்டல பொறுப்பாளர் திலிப் கண்ணன், " இந்த நிகழ்ச்சி இன்று சிவகங்கையில் நடந்தது. வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலைஜியை வரவேற்க்க வைத்த கொடி. திமுகவின் அமைச்சர் பெரிய கருப்பன் வேலுநாச்சியார் நினைவு மண்டபத்திற்க்கு வருவதால் அவங்க கட்சிக்காரர்களும் கொடி வைத்தார்கள்.