YouTurn

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு குடியரசுத் தலைவருக்கு உரிய மரியாதை வழங்குகிறதா?

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு குடியரசுத் தலைவருக்கு உரிய மரியாதை வழங்குகிறதா?

எல்.கே.அத்வானிக்குபாரத ரத்னாவிருதைக் குடியரசுத் தலைவர் வழங்கும் போது உடன் இருந்த பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் முர்முவிற்கு உரிய மரியாதை அளிக்காமல் அமர்ந்திருந்தார் எனப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பழங்குடியின பெண் என்பதால் பாஜகவினர் அவருக்கு மரியாதை செலுத்தாத சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதாக விமர்சனங்கள் எழுகிறது. 





இந்திய அரசு வழங்கக் கூடிய விருதுகளில் மிக உயரியதாகக் கருதப்படும் பாரத ரத்னா 1954ம் ஆண்டு முதல் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி பீகாரைச் சேர்ந்த மறைந்த முன்னால் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு கடந்த ஜனவரி 23ம் தேதி பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னாள் துணைப் பிரதமர்  எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டன. 





இந்த விருது வழங்கும் விழா கடந்த மாதம் 30ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. விருது அறிவிக்கப்பட்டவர்களில் 4 பேர் காலமானவர்கள் என்பதால் அவர்களில் வாரிசுகள் அந்த விருதினை குடியரசுத் தலைவர்  திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். 


முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக எல்.கே.அத்வானி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. எனவே அத்வானிக்கான விருதை டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று மார்ச் 31ம் தேதியன்று குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார். அப்போது பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 


இந்நிகழ்வின் போது குடியரசுத் தலைவர் பெண் என்பதாலும் பழங்குடியினர் என்பதாலும் அவரை நிற்க வைத்துவிட்டு மோடி அமர்ந்து கொண்டுள்ளார் என்கிற விமர்சனத்தை எதிர்க் கட்சியினர் முன்வைத்து வருகின்றனர். 





அத்வானிக்கு பாரத ரத்னா விருது கொடுக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குடியரசுத் தலைவரின் அதிகாரப் பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அத்வானி மற்றும் மோடியின் முன்னால் முர்முவும் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. 


விருது வழங்கும் போது குடியரசுத் தலைவர் நின்று கொண்டு இருக்கிறார். அத்வானி வயது மூப்பின் காரணமாக அமர்ந்துள்ளார். ஆனால், மோடியோ மரியாதை நிமித்தமாகக் கூட எழுந்து நிற்கவில்லை. 


முன்னதாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்குக் குடியரசுத் தலைவரை ஒன்றிய பாஜக அரசு அழைக்கவில்லை. அப்போதே இது குறித்த கண்டனங்கள் எழுந்தன. பாஜக தலைவர்களின் இத்தகைய செயல்கள் குடியரசுத் தலைவருக்கு உரிய மரியாதையும் அங்கிகாரமும் ஒன்றிய அரசால் வழங்கப்படுகிறதா என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.


 
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை