சுப்ரமணிய சுவாமி மீது பாய்ந்த வழக்கு அண்ணாமலை மீது பாயுமா ?.. " Pariah " என சொல்லலாமா !

From hopelessness to Hope
From parochial mindset to Nation First
From dilly dallying to Conviction
From one sided to Holistic Development
From a pariah to a ViswaGuru
From Dark to Light
8 years & counting with Shri @narendramodi avl as our first servant! #8YearsOfSeva pic.twitter.com/RwnS7z2kNh
— K.Annamalai (@annamalai_k) May 30, 2022
Archive link
மே 30-ம் தேதி பதிவிட்ட பதிவில், " From a pariah to a ViswaGuru" என அண்ணாமலைப் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து, பாஜக தலைவர் அண்ணாமலை பறையர் சமூகத்தை இழிவுப்படுத்தி உள்ளதாக கண்டனப் பதிவுகள் வெளியாகத் துவங்கின.
#எச்சரிக்கை
பாப்பானுக்கே மூப்பான் பறையன்,
கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி.
சனாதனத்தை-
வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான்.
அப்படிப்பட்ட
மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும்
சாதிய மனநோயாளி @annamalai_k மன்னிப்பு கேட்கவேண்டும். https://t.co/uVsBH5D6Ru
— வன்னி அரசு (@VanniArasu_VCK) May 30, 2022
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு, " மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் " என ட்விட்டரில் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும், ட்விட்டர் தளத்தில் பலரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
பூர்வகுடி பறையர் சமுதாயத்தை இழிவுசெய்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை @annamalai_k மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். @NCSC_GoI @tnpoliceoffl pic.twitter.com/JiKYFGjUzk
— Vikraman R (@RVikraman) May 30, 2022
நாடக அரசியல் வியாதி அண்ணாமலை யை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்..
அன்று : @annamalai_k இந்து மதத்தில் சாதி இல்லை..
இன்று : Pariah To a ViswaGuru#பட்டியலின_விரோதி_அண்ணாமலை
அன்று இன்று pic.twitter.com/7utUMOQ5pD
— Kalai Vani (@imKalaiVani) May 31, 2022
தன்னுடைய ட்வீட் பதிவு சர்ச்சையான பிறகு, " கத்தியை விட நம் புத்தி கூர்மை என்று சொல்லுவார்கள். உங்களுக்காக ஒரு ஆங்கில - தமிழ் அகராதி வாங்கி அனுப்புகிறேன், நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும்" , " pariah " என்பதற்கு ஓர் அமைப்போ அல்லது நாடோ என மற்றவர்கள் விரும்பாத மற்றும் தவிர்க்கும் நபர் " எனப் பொருள் என்று மெக்மில்லன் அகராதியைப் பதிவிட்டு இருந்தார்.
அண்ணா வணக்கம்!
கத்தியை விட நம் புத்தி கூர்மை என்று சொல்லுவார்கள்.
உங்களுக்காக ஒரு ஆங்கில - தமிழ் அகராதி வாங்கி அனுப்புகிறேன், நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும்.
வாழ்க வளமுடன்! https://t.co/M86yc9ZG7x pic.twitter.com/ge0iSlHJ4M
— K.Annamalai (@annamalai_k) May 30, 2022
Archive link
ஆனால், pariah என்ற ஆங்கில வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தையே குறிக்கிறது. மன்னிப்புக் கேளுங்கள்! இனி யாரும் யாரையும் பறையா என்று சொல்லிவிட்டு. இப்படி உங்க Dictionary-ஐ தூக்க மாட்டார்களா " என யூடர்ன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அண்ணா, உங்களுக்கு Oxford dictionary அனுப்பட்டுமா ?
மன்னிப்புக் கேளுங்கள்! இனி யாரும் யாரையும் பறையா என்று சொல்லிவிட்டு . இப்படி உங்க Dictionary-ஐ தூக்க மாட்டார்களா https://t.co/UMcRXFD7Tv pic.twitter.com/uIWferRzCI
— Iyan Karthikeyan (@Iyankarthikeyan) May 31, 2022
இதற்கிடையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 1995-ல் மதுரை கூட்டத்தில் பேசிய சுப்ரமணிய சுவாமி விடுதலைகள் புலிகளின் தலைவர் பிரபாகரனை, " International Political Pariah " எனப் பேசியுள்ளார். இதற்கு எதிராக எழுந்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை காவல்துறையால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.