மே.வ வன்முறையில் இறந்ததாக உயிருடன் இருப்பவரின் படத்தை பயன்படுத்தி பாஜக வீடியோ !

மேற்கு வங்க தேர்தல் முடிவுக்கு பிறகு நிகழ்ந்த வன்முறை தாக்குதல்களில் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இறந்தது, பாதிக்கப்பட்டது குறித்து வீடியோ பதிவுகள், புகைப்படங்கள் உடன் கூடிய வீடியோ ஒன்று மேற்கு வங்க பாஜக மற்றும் பிஜேபி4இந்தியா உடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டது.
Twitter link | Archive link
மேற்கு வங்கம் வன்முறை தொடர்பாக பாஜக சார்பில் வெளியிட்ட வீடியோவில் உயிருடன், அதுவும் மேற்கு வங்கத்திற்கு தொடர்பில்லாத ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
Facebook link | Archive link
அப்ரோ பானர்ஜி என்பவர் பாஜக வெளியிட்ட வீடியோ காட்சிகளுடன், " நான் அப்ரோ பானர்ஜி. சிதல்குச்சியில் இருந்து 1,300 கி.மீ தொலைவில் நலமுடன் இருக்கிறேன். பாஜக ஐடி பிரிவு என்னை சிதல்குச்சியில் இறந்த மாணிக் மொய்த்ரா எனக் கூறி வருகிறார்கள். தயவு செய்து போலி பதிவுகளை நம்ப வேண்டாம், கவலைப்பட வேண்டாம். நான் மீண்டும் சொல்கிறேன், நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன் " எனப் பதிவிட்டு இருக்கிறார்.

அப்ரோ பானர்ஜி பதிவு வைரலாக தொடங்கிய பிறகு இந்த வீடியோ மேற்கு வங்க பாஜகவின் முகநூல் பக்கத்தில் இருந்து அகற்றப்பட்டாலும் பிஜேபி4இந்தியா எனும் பக்கங்களில் இருந்து நீக்கப்படவில்லை. பாஜக வெளியிட்ட 5.38 நிமிட வீடியோவின் 2.35வது நிமிடத்தில் மாணிக் மொய்த்ரா என இவரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
" மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுக்கு பிறகு நடந்த வன்முறையில் பலியான 9 பேரின் பெயர்களை பாஜக முன்பு பகிர்ந்து கொண்டது. அவர்களில் சிதல்குச்சியில் கொல்லப்பட்ட மாணிக் மொய்த்ரா மற்றும் மிந்து பார்மன் ஆகியோரின் பெயர்களும் அடங்கும். இருப்பினும், " மாணிக் மொய்த்ரா " என யாரும் அடையாளம் காணப்படவில்லை " என இந்திய டுடே கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்ரோ பானர்ஜி இந்தியா டுடேவைச் சேர்ந்த பத்ரிக்கையாளர் எனக் கூறப்படுகிறது. தன் புகைப்படத்தை பயன்படுத்தி இறந்தவர் என பாஜக வீடியோ வெளியிட்டனர் என அப்ரோ பானர்ஜி பதிவிட்ட பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
“আগামী দিন তো আমরাই থাকবো, তখন আমরা দেখে নেবো”. These were Mamata Didi's words during a pre-poll rally in Nandigram.
Clearly, the pogrom that has taken place in Bengal was long planned by TMC!
Is this how democracy looks like? Nation wants an answer, @MamataOfficial! pic.twitter.com/Sy8u7ii3Lv
— BJP (@BJP4India) May 5, 2021
Twitter link | Archive link
மேற்கு வங்கம் வன்முறை தொடர்பாக பாஜக சார்பில் வெளியிட்ட வீடியோவில் உயிருடன், அதுவும் மேற்கு வங்கத்திற்கு தொடர்பில்லாத ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
Facebook link | Archive link
அப்ரோ பானர்ஜி என்பவர் பாஜக வெளியிட்ட வீடியோ காட்சிகளுடன், " நான் அப்ரோ பானர்ஜி. சிதல்குச்சியில் இருந்து 1,300 கி.மீ தொலைவில் நலமுடன் இருக்கிறேன். பாஜக ஐடி பிரிவு என்னை சிதல்குச்சியில் இறந்த மாணிக் மொய்த்ரா எனக் கூறி வருகிறார்கள். தயவு செய்து போலி பதிவுகளை நம்ப வேண்டாம், கவலைப்பட வேண்டாம். நான் மீண்டும் சொல்கிறேன், நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன் " எனப் பதிவிட்டு இருக்கிறார்.

அப்ரோ பானர்ஜி பதிவு வைரலாக தொடங்கிய பிறகு இந்த வீடியோ மேற்கு வங்க பாஜகவின் முகநூல் பக்கத்தில் இருந்து அகற்றப்பட்டாலும் பிஜேபி4இந்தியா எனும் பக்கங்களில் இருந்து நீக்கப்படவில்லை. பாஜக வெளியிட்ட 5.38 நிமிட வீடியோவின் 2.35வது நிமிடத்தில் மாணிக் மொய்த்ரா என இவரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
" மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுக்கு பிறகு நடந்த வன்முறையில் பலியான 9 பேரின் பெயர்களை பாஜக முன்பு பகிர்ந்து கொண்டது. அவர்களில் சிதல்குச்சியில் கொல்லப்பட்ட மாணிக் மொய்த்ரா மற்றும் மிந்து பார்மன் ஆகியோரின் பெயர்களும் அடங்கும். இருப்பினும், " மாணிக் மொய்த்ரா " என யாரும் அடையாளம் காணப்படவில்லை " என இந்திய டுடே கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்ரோ பானர்ஜி இந்தியா டுடேவைச் சேர்ந்த பத்ரிக்கையாளர் எனக் கூறப்படுகிறது. தன் புகைப்படத்தை பயன்படுத்தி இறந்தவர் என பாஜக வீடியோ வெளியிட்டனர் என அப்ரோ பானர்ஜி பதிவிட்ட பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.